
பொன்னியின் செல்வன் ஏன் டிராப் ஆனது என்பதற்கு தினம் ஒரு காரணமாக வெளிவந்து ரசிகர்களை குழப்பி வருகிறது. லேட்டஸ்ட்டாக வந்த ஒரு காரணம் நிஜமாகவே யோசிக்க வைப்பதுதான். இப்படத்தில் விஜய்தான் ஹீரோ. படத்தை தயாரிக்க முன் வந்தது சன் பிக்சர்ஸ்.
இவர்கள் தயாரித்தால் இதில் நான் நடிக்க மாட்டேன் என்றாராம் அவர். தனது சொந்தப்பணத்தில் இந்த படத்தை எடுக்க தயாராகிவிட்டாராம் மணி. ஆனால் அதற்கும் திடீர் முட்டுக்கட்டை வந்ததாம். யார் பேச்சை கேட்பது, யார் பேச்சை அலட்சியப்படுத்துவது என்பதில் குழம்பிய மணி, படம் எடுக்கிற திட்டடத்தையே கைவிட்டு விடலாம் என்ற முடிவுக்கு வந்தாராம்.
கொடுத்த தேதிகள் அப்படியே இருக்கு. படத்தை ஆரம்பிங்க. பார்த்துக்கலாம் என்று இப்பவும் நம்பிக்கையோடு அவரை உசுப்பேற்றிக் கொண்டிருக்கிறார்களாம் இன்னும் சிலர். யார் பேச்சை கேட்கப் போகிறாரோ அவர்?
No comments:
Post a Comment