Saturday, June 18

ஒரே குழப்பத்தில் இருக்கிறாராம் விஜய்

நடிகர் விஜய் வேலாயுதம், நண்பன் படத்தை தொடர்ந்து அடுத்து இயக்குனர் சீமான் படத்தில் நடிப்பதா, இயக்குனர் பேரரசு படத்தில் நடிப்பதா என்று ஒரே குழப்பத்தில் இருக்கிறாராம்.

ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடித்த வேலாயுதம் படம் விரைவில் வெளிவர உள்ளது. அதைத் தொடர்ந்து சங்கரின் நண்பன் படம் பாதி முடிவடைந்துள்ளது. இந்த இரண்டு படங்களையும் முடித்தவுடன் சீமான் இயக்கத்தில் பகலவன் படத்தில் விஜய் நடிப்பதாக கூறப்பட்டது.

ஆனால் இயக்குனர் பேரரசு விவசாயி என்ற தலைப்பில் ஆக்ஷன் கலந்த அதிரடி கதை ஒன்றை தயார் செய்து விஜயிடம் கூறியுள்ளார். இதனால் யார் படத்தில் நடிப்பது என்று மிகுந்த குழப்பத்தில் உள்ளாராம் விஜய்.

No comments:

Post a Comment