10:20:00 PM
காவலன் வருதோ இல்லையோ இப்படியே இருந்தால் வேலைக்கு ஆகாது என்று நினைத்து அடுத்த படத்தில் இறங்கி விட்டார் விஜய். காவலன் ஷூட்டிங் முடிந்ததும் 'வேலாயுதம்' படத்தில் நடிப்பதாக இருந்த விஜய் காவலன் களேபரத்தில் 'வேலாயுதம்' படத்தை தள்ளி வைத்தார். 'வேலாயுதம்' படத்தை முடித்துவிட்டால் சீமானின் 'கோபம்' படத்தில் நடிக்க சரியாக இருக்கும் என யோசித்து வந்தார்.
ஆனால் இப்போது சீமானும் சிறையில் இருந்து வெளியே வந்துவிட்டார். விஜய்க்கு சீமானின் கதை பிடித்துவிட்டது. சீமானும் இந்தக் கதைக்கு விஜய் தான் சரியாக இருக்கும் என நினைக்கிறார். படத்தை தயாரிக்க தாணுவும் தயாராக உள்ளார். இன்னும் என்ன வேண்டும் படத்தை துவங்க வேண்டியது தான். இந்த நேரத்தில் சீமானுக்கு நிறைய கோபங்கள் இருக்கிறது, காவலன் விஷயத்தில் விஜய்க்கும் நிறைய கோபம். இதுதான் இணைய சரியான நேரம் என்று இருவரும் நினைக்கிறார்கள்.
விஜய் ராகுலை சென்று சந்தித்தார், பின் அசின் விவகாரம் என விஜய் மீது உலகத் தமிழர்களுக்கு கோபம் இருக்கிறது. இப்போது நீங்கள் விஜய்யோடு இணைவது சரியாக இருக்குமா என்று சீமானிடம் கேட்டதற்கு, விஜய் ராகுலை சந்தித்தார் அவ்வளவுதான். மற்றபடி உலகத் தமிழர்களுக்கு எதிராகவோ ஈழத்துக்கு எதிராகவோ தம்பி விஜய் ஏதும் செயல்படவில்லை என்று நான் நினைக்கிறேன் அப்படி செயல்பட்டால் அவர் மீது எனக்கும் கோபம் வரும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
விஜய்யின் கோபம் சினிமாவில் மட்டுமில்லை அரசியலாகவும் வெடிக்க இருக்கிற நிலையில் திருச்சியில் தன் மக்கள் இயக்கத்தின் முதல் மாநாட்டை நடத்த இருக்கிறார் விஜய். அடுத்த வருடம் பொங்கல் கழித்து நடக்க இருக்கும் இந்த மாநாட்டில் தன் அரசியல் பிரவேசத்தைப் பற்றி வெளிப்படையாக பேச இருக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்தின் ரசிகர் மன்றத் தலைவர்களை தனித் தனியாக சந்தித்து வருகிறார் விஜய்.
இப்போதைக்கு சீமானுடன் சேர்ந்து திரையில் கோபப்பட இருக்கிறார் விஜய். அதைத் தொடர்ந்து அமீரும் விஜயுடன் சேர்ந்து படம் பண்ண இருக்கிறார். இது தான் விஜய் பிளான். ஆனால் அதற்குள்ளாக என்ன நடக்குமோ ? நல்லது நடந்தா சரி...
10:18:00 PM
'காவலன்' படத்தை எப்படியாவது இந்த மாதம் வெளியிட வேண்டும் என்று எவ்வளவோ போராடினார் விஜய். ஆனால் முயற்சிகள் வீண் போனதுதான் மிச்சம். சென்னையில் மட்டும் திரையரங்குகள் கிடைத்த நிலையில், பரவாயில்லை ரிலீஸ் பண்ணுவோம் என்று சொல்லி விட்டார்...
ஆனால் ரசிகர் மன்ற ரசிகர்கள் விடவில்லை. தலைவர் படத்துக்கு இந்த நிலைமையா? படம் லேட்டா வந்தாலும் பரவாயில்லை, ஆனால் தமிழகமெங்கும் படத்தை ரிலிஸ் பண்ண வேண்டும் என்று தங்களின் குமுறலை தெரிவித்திருக்கிறார்கள். இதை தொடர்ந்து பொங்கலுக்கு படம் வரும் என்று சொல்லிவிட்டார் விஜய். ஆனா எந்த பொங்கலுக்கு என்று தான் தெரியவில்லை, விஜய் நிலைமையை பார்த்தால் அடுத்தப் பொங்கலுக்கு தான் படத்தை ரிலீஸ் பண்ண முடியும் போல இருக்கு. இதற்கு அரசியல் ரீதியாக பல காரணங்கள் சொல்லப் பட்டாலும், திரையரங்குகளின் உண்மை நிலைமை என்ன என்று பார்த்தால்...
கிறிஸ்துமசுக்கு உதயநிதி தயாரிப்பில் கமல், திரிஷா நடிக்கும் 'மன்மதன் அம்பு' வெளியாகிறது. 'மன்மதன் அம்பு' படத்திற்காகதான் விஜய்யை ஓரம் கட்டி விட்டன திரையரங்குகள். விஜய்யின் ஐந்து தோல்வி படங்களால் திரையரங்க உரிமையாளர்களுக்கு கோபம் இன்னும் நீடித்த நிலையில் இருக்கிறது என்பது இன்னொரு காரணம். தற்போது சென்சார் முடிந்துள்ள நிலையில் 'மன்மதன் அம்பு' படத்திற்கான ரிலீஸ் வேலைகளில் தீவிரமாக இருந்து வருகிறார் கே.எஸ்.ரவிக்குமார். 'மன்மதன் அம்பு'வை இந்த மாதம் எப்படியாவது வெளியிட வேண்டும் என்பது இயக்குனருக்கு உதயநிதி போட்ட கட்டளை.
ஆனால் இவ்வளவு சிக்கல்களுக்கு மத்தியிலும் மன்மதன் அம்புவிற்கு முன்பாகவே இந்த மாதம் 17 ஆம் தேதி தன் ஈசன் படத்தை தில்லாக வெளியிடுகிறார் சசிக்குமார். சசிக்குமாரின் இயக்கத்தில் வெளிவந்து திரையிட்ட அனைத்து திரையரங்கிலும் 100 நாட்கள் வெற்றியை கண்டது சுப்ரமணியபுரம். சசிக்குமார் நடித்த நாடோடிகள், தயாரித்த பசங்க என மூன்று படங்களும் திரையரங்க உரிமையாளர்களுக்கு ஏமாற்றம் இல்லாத படங்களாகவே அமைந்தது. அதனால்தான் இப்போதும் 'ஈசன்' படத்துக்கு கை கொடுத்திருக்கிறது திரையரங்கங்கள்.
சரி, இது ஒருபுறம் இருக்கட்டும். பொங்கலுக்காவது விஜய்க்கு வழிவிடுவார்களா என்று பார்த்தால், இப்போதைக்கு அதுவும் நடக்காது என்றே சொல்லலாம். ஏனென்றால் சன் பிக்சர்சின் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் 'ஆடுகளம்' படத்திற்காக திரையரங்குகள் ஆல்ரெடி முடிவாகிவிட்டன. அது மட்டும் இல்லாது விரைவில் இசை வெளியீடு நடக்க இருக்கும் 'சிறுத்தை' படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது. வியாபார விஷயத்தில் முதல் படம் தொடங்கி நம்பிக்கை நட்சத்திரமாகவே இருந்து வருகிறார் கார்த்தி. கார்த்தியின் கடந்த இரண்டு படங்களையும் வெளியிட்டது கிளவுட் நைன் தான். அதனால் இந்த படத்தையும் கிளவுட் நைன் வாங்க வாய்ப்பிருகிறது என்றும் சொல்லப்படுகிறது
'காவலன்' பொறுத்த வரை, வரும்... ஆனா வராது! என்ற நிலைதான். ஆக, இப்படி பல விஷயங்களால் வெயிட்டிங் லிஸ்டுக்கு தள்ளப் பட்டிருக்கிறார் விஜய்!