இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Friday, January 21

திருச்சி மாநாட்டில் இருவர்.. விஜய்யின் அப்பா போடும் புதுக்கணக்கு







நியூட்டனின் மூன்றாம் விதி பற்றி அதிகம யோசிக்க ஆரம்பித்திருக்கிறார் விஜய்யின்Vijayakanth - Seemanஅப்பா எஸ்.ஏ.சி. (அட! இது எஸ்.ஜே.சூர்யா படத்தை பற்றிய யோசனை இல்லீங்க. 'ஒவ்வொரு விசைக்கும் அதற்கு சமமான...' அந்த மேட்டர்)

விஜய்க்கு எதிராக பின்னப்பட்டிருக்கும் இந்த வலை அரசியல் சார்ந்தது என்றாலும், அதை கடன் பிரச்சனையாக்கி விட்ட சூட்சுமத்தை நன்றாகவே உணர்ந்தாராம் அவர். இனிமேலும் பொறுத்திருப்பதில் அர்த்தமில்லை என்கிற அளவுக்கு சூடாகிக் கிடக்கிறாராம்.

பிப்ரவரி 6 ந் தேதி திருச்சியில் கூடுகிறது விஜய் ரசிகர்களின் மாநாடு. தனது பலத்தை காட்டப் போகும் மாநாடாகவே இதை பார்க்கிறார் எஸ்.ஏ.சி. நான் தனி ஆள் இல்லை என்பதையும் அங்கு நிரூபிக்க திட்டமிட்டிருக்கிறாராம் அவர். அந்த மேடையில் இரண்டும் முக்கியமான தலைகளை மேடையேற்ற திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு இருவருமே சம்மதம் தெரிவித்திருப்பதுதான் இந்த செய்தியின் சாராம்சம்.

ஒருவர் விஜயகாந்த். இன்னொருவர் சீமான்!

0 Comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...