
நடிகர் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன் நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்கியுள்ள படம் ’’சட்டப்படி குற்றம்’’. இப்படத்தில் சத்யராஜ், சீமான், ராதாரவி நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில், அரசியல்வாதியால் பாதிக்கப்படும் நபராக சத்யராஜ் வருகிறார். பின்னர் போராளியாக மாறுகிறார். தன்னை போலவே பாதிப்புக்கு உள்ளான இளைஞர்களை இவர் ஒன்று சேர்த்து சமுதாய மாற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார். அது முடிந்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.
பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் சத்யராஜ் தலைமையிலான மக்கள் இயக்கத்தால் (இது விஜய் ரசிகர் மன்றத்துக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்) கடத்தப்பட, அரிசி கடத்துகிறார்கள், சாராயம் கடத்துகிறார்கள்! இப்போது அதிகாரிகளை கடத்துகிறார்கள். எங்கே சார் போகுது நாடு” என அரசு அதிகாரிகள் ஒரு காட்சியில் பேசிக் கொள்கிறார்கள்.
கனிம வள ஊழல் தொடர்பாக கைதான ரங்கராசன் வழக்கு விசாரணையில் அவருக்கு எதிராக ஆஜராகிறார் சீமான். அப்போது நீதி தேவதையின் கண்களை மட்டும் இவர் கட்டவில்லை.
நாட்டு மக்கள் எல்லோரின் கண்களையும் கட்டி விட்டார் என்கிறார் சீமான். வழக்கு விசாரணையின் போது ரங்கராசனுக்கு, சேர் (இருக்கை) கொடுங்கள் என ஒருவர் சொல்ல, நீதிபதி அவர்களே உங்களுக்கும் ஒரு ஷேர் தந்து கூட்டு சேர்த்து விடப் போகிறார் என்று கமெண்ட் அடிக்கிறார் மற்றொருவர்.
1 லட்சம் ரூபாய் அடித்தவனுக்கு ஒரு வருஷம் ஜெயில், 5 லட்சம் ரூபாய் அடித்தவனுக்கு 5 வருஷம் ஜெயில். ஒரு லட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாய் அடித்தவனுக்கு எத்தனை ஆண்டு என கேட்க, நீதிபதியாக இருக்கும் ராதாரவி, எத்தனை சைபர் என்று எனக்கே தெரியவில்லை என்கிறார்.
வழக்கின் தீர்ப்பின் போது ராதாரவி, இதுவரை நீங்க எழுதிக் கொடுத்த வசனங்களை இதுவரை பேசியிருக்கிறோம்.
இப்போதாவது சுயசிந்தனையுடன் தீரப்பு எழுத விடுங்கள் என்கிறார்.
நடப்பு அரசியலையும், நாட்டின் அண்மைக்கால நிகழ்வுகளையும் நினைவூட்டும் வசனங்கள் இந்தப் படத்தில் நிறைந்துள்ளன.
இந்தப்படத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் இருப்பதாக எஸ்.ஏ.சந்திரசேகரும், நடிகர் சத்யராஜூம் கூறியுள்ளனர்.
ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் சத்யராஜும், எஸ்.ஏ.சந்திரசேகரும் பேட்டி அளித்தபோது,, ‘’நான் இந்தப்படத்தில் நடித்ததற்காக பயப்படவில்லை. ஏன் என்றால் எனக்கு ஏதும் பிரச்சனை என்றால் புரட்சித்தலைவர் ரசிகர்கள் பார்த்துக்கொள்வார்கள்’’ என்றார் சத்யராஜ்.
அவர் மேலும், ‘’வள்ளல் என்று ஒருபடத்தில் நான் நடித்துக்கொண்டிருந்தபோது பண கஷ்டம் வந்தது. என் நண்பர் விஜயகாந்த் இதைத்தெரிந்துகொண்டு எனக்கு பண உதவி செய்தார். அவர் பண உதவியே செய்வார். மற்ற உதவியா செய்யமாட்டார்.
அதே போல் விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய்க்கு அஜீத் நண்பனாக இருப்பதால் அஜீத் ரசிகர்களும் வருவார்கள்.
ஒரு பிரச்சனை என்றால் எம்.ஜி.ஆர்., விஜயகாந்த், விஜய்,அஜீத் ரசிகர்கள் வந்து களத்தில் நிற்பார்கள். அதனால் நான் யாருக்கும் பயப்படவில்லை. நீங்களும் பயப்படவேண்டாம். நம்மை அவர்கள் காப்பாற்றிவிடுவார்கள்’’ என்று கூறினார் சத்யராஜ்.






நான் எதிர்பார்த்த மாதிரி இல்லை விஜய் என நடிகை இலியானா தெரிவித்துள்ளார்.



தப்பில்லை சட்டப்படி குற்றம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை! ஜெ. வருவார், விஜயகாந்த் வருவார், விஜய் இருப்பார் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி இவர்கள் யாரும் இல்லாமலே சூட்டை கிளப்பியதுதான் ஆச்சர்யம்.
வரைக்கும்! நாட்டு நடப்பைதான் இந்த படத்தில் சொல்லியிருக்கேன் என்று எஸ்.ஏ.சி சார் சொல்றதெல்லாம் சும்மா. இந்த கவருமென்ட்டுக்கு எதிராதான் சட்டப்படி குற்றம் படத்தை அவர் எடுத்திருக்காரு. நான் படத்தை பார்த்துட்டேன். ஃபயர் மாதிரி வந்திருக்கு. இதை பார்த்துட்டு இந்த கவர்மென்ட்டே அவரு காலை பிடிச்சி செஞ்சதெல்லாம் தப்புன்னு மன்னிப்பு கேட்குதா இல்லையா பாருங்க என்றார் பலத்த நகைப்பொலிக்கிடையில். நான் விஜய் சார் நடிச்ச படங்களையெல்லாம் டிஸ்ட்ரிபூட் பண்ணியிருக்கேன். ரெண்டு படங்களை தயாரிச்சிருக்கேன். ஒரு நாளு கூட அவருகிட்ட கால்ஷீட் கேட்டதில்லை என்று சந்தடி சாக்கில் தனது வெயிட்டிங் லிஸ்ட் நிலையையும் நினைவு படுத்தியவர், நாகப்பட்டினத்தில் அவரு கலந்துகிட்ட கண்டன கூட்டத்துக்கு கூட யாரும் கூப்பிடலை. நான்தான் வலிய போய் சப்போர்ட் பண்ணினேன். விஜய் சார் அரசியலுக்கு வரணும் என்றார் தனது மீசையை தடவிக் கொண்டே! இவரது பேச்சுக்கு ஏக களேபரமான ரெஸ்பான்ஸ் அங்கே!












