விஜய் நடித்து வரும் 'துப்பாக்கி' படத்தின் தலைப்புக்கு தடை விதித்திருக்கிறது நீதிமன்றம்.
தடை ஏன் என்பதற்கான காரணம் :
ரவிதேவன் தயாரிப்பில் லோகியாஸ் இயக்கத்தில் 2009ம் ஆண்டு 'கள்ளத்துப்பாக்கி' என்ற படத்தலைப்பு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்கு 'துப்பாக்கி' என்ற தலைப்பை பதிவு செய்தார்.
'துப்பாக்கி' படத்தலைப்புக்கு ஏ.ஆர்.முருகதாஸ் தயார் செய்த லோகோ வடிவமைப்பும், 'கள்ளத்துப்பாக்கி' படத்தலைப்பின் லோகோ வடிவமைப்பும் ஒரே மாதிரி இருந்தது.
இதையடுத்து 'கள்ளத்துப்பாக்கி' படக்குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டனர். தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நியாயம் கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டி, நீதிமன்றத்துக்குப் போனது 'கள்ளத்துப்பாக்கி' படக்குழு.
இம்மனுவை விசாரித்த நீதிபதி, விஜய் நடித்து வரும் படத்திற்கு 'துப்பாக்கி' என்று தலைப்பு வைக்கக்கூடாது என தடை விதித்துள்ளார்!













0 Comments:
Post a Comment