'நான் ஈ' படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு ரசிகர்களைக் கவர்ந்தார் சமந்தா. சரும நோய் சிகிச்சை எடுத்துக் கொள்வதால் ஷங்கரின் ' ஐ', மணிரத்னத்தின் 'கடல்' ஆகிய இரண்டு படங்களில் இருந்தும் விலகினார்.
ஆனால், சமந்தா தற்போது பெரும் உற்சாகத்தில் இருக்கிறார். காரணம் விஜய் - இயக்குனர் விஜய் இணையும் படத்தில் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். இப்படத்தினை பிரபல பைனான்சியர் சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரிக்க இருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார்.
சமந்தா தெலுங்கில் மகேஷ் பாபுவிடன் இணைந்து நடித்த 'தூக்குடு' படத்தின் மூலமாக தான் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
தற்போது விஜய்யுடன் இணைந்து நடிக்க இருப்பதால் தமிழிலும் முன்னணி நடிகையாக வலம் வரலாம் என்பது தான் சமந்தாவின் திட்டம். அனைத்தும் நல்லபடியாக அமைந்து இந்த படத்தில் நடித்து விட வேண்டும் என்று கடவுளிடம் வேண்டி வருகிறார் சமந்தா.
அடுத்து சமந்தா நடிப்பில் தமிழில் 'நீதானே என் பொன்வசந்தம்' வெளிவர இருக்கிறது













0 Comments:
Post a Comment