"படத்துல விஜய் கலக்கியிருக்காரு.. ஜீவா பின்னியிருக்காரு.. சத்யராஜ் சார் பின்னி எடுத்திருக்காரு.." என்று சக நடிகர்களை ஸ்ரீகாந்த் பாராட்டினார்
நடிகர் ஜீவா விஜய் பற்றி குறிப்பிடும் போது "இவ்ளோ வெற்றிக்கப்பறமும் ரொம்ப சிம்பிளான நபர் விஜய். அவர்கிட்டேந்து நிறைய விஷயங்கள் கத்துகிட்டேன்" என்று கூறினார்.
விஜய் மேடையேறும் போது கரகோசங்களுடன், பட்டாசு வெடியின் ஓசையிம் சேர்ந்து கொண்டது.
"நான் பிறந்தது சென்னைன்னாலும் கோயம்புத்தூர் பாஷை எனக்கு நல்லா வருது. ண்ணா..!" என்று ஆரம்பித்த விஜய், ஷங்கர் ஒரு அற்புதமான மனிதர். அவரை இந்தியாவோட ஸ்பீல்பெர்க்ன்னு சொல்லலாம்!, ஸ்ரீகாந்த் ரொம்ப நல்லா நடிச்சிருக்கார். ஷூட்டிங் ஸ்பாட் கலகலன்னு இருக்க வெக்கறது ஜீவா அண்ணன் தான்!, ஜீவா என்னுடைய நல்ல நண்பன் ஆகிட்டார் ! இந்த படத்தின் மூலமா நல்ல நண்பர்கள் கிடைச்சது ரொம்ப சந்தோஷம் ! படத்துல எல்லா பாட்டுமே நல்லா வந்திருக்கு ! என்று கூறி " ஏதோ உன்னாலே.. " பாடலைப் பாடி முடிக்க, கைத்தட்டல் காதை பிளந்தது.
விஜய் பேசி முடித்ததும், விஜய்க்கு ஆளுயரய மாலையும் கிரீடமும் அணிவித்தார்கள்.
சங்கர் பேசும் போது "எந்திரன் ஷுட்டிங்ல ஒரு காரணத்தால் ஒரு நாள் தாமதம் ஆக, நான் 3 இடியட்ஸ் படம் பார்க்கப் போனேன். அப்படி உருவானது தான் நண்பன், ரஜினிக்கு அப்பறம் கரெக்ட் டயத்துக்கு ஷுட்டிங்குக்கு வருவது விஜய் தான் !, விஜய்யை எல்லாருக்கும் பிடிக்கும்.. இந்த படத்துக்கப்பறம் அவரை பிடிக்காதவங்க யாராவது இருந்தாலும், அவங்களுக்கும் விஜய்யை பிடிக்கும் ! என்று கூறினார்.













0 Comments:
Post a Comment