தேர்தல் நேரத்தில் எங்கு போய் ஒளியலாம் என்று பெரிய நடிகர்கள் எல்லாரும் இப்போதே பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் இருப்பவர் ரஜினி என்கிறார்கள். ராணா படத்திற்காக அந்த நேரத்தில் எங்காவது டூயட் பாடிக் கொண்டிருப்பாராம் ரஜினி. இவராவது பொதுவானவர். யார் வலையிலும் சிக்கிவிடக் கூடாது என்று ஒளிந்து கொள்வதில் ஒரு லாஜிக் இருக்கிறது. ஆனால் தனது படம் தடுக்கப்பட்டதற்கு காரணமே அரசியல்வாதிகள்தான் என்று காரசாரமாக பேட்டியெல்லாம் கொடுத்த விஜய் மனசிலும் அப்படி ஒரு எண்ணம் இருப்பதாக சொல்லப்படுவதுதான் 'ஐயே' ரகம்!
இப்பவே விஜய் ஒரு எண்ணத்திலும், அவரது அப்பா ஒரு எண்ணத்திலும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இழுபறியின் காரணமாகதான் அவர் இன்னும் அதிமுக பொதுச்செயலார் ஜெயலலிதாவை சந்திக்காமல் இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள். இலங்கை ராணுவத்தினரால் பந்தாடப்படும் மீனவர்களுக்கு ஆதரவாக விஜய் உண்ணாவிரதம் ஆர்ப்பாட்டமெல்லாம் நடத்தினாலும், தேர்தல் நேர சுற்றுப்பயணம் மட்டும் இருக்கவே இருக்காது என்கிறார்கள் விஜய் தரப்பில்!
இதை தவிர்க்கதான் வெளிநாடு ட்ரிப் அடிக்கப் போகிறாராம் விஜய். கழுவுற மீனுல நழுவுற மீனா இருக்கறதுதானே நல்லது!
Thursday, February 17
அந்த நேரத்தில் எங்கு இருக்கலாம்? - விஜய் போடும் புதுத்திட்டம்
3:32:00 PM
No comments
Subscribe to:
Post Comments (Atom)













0 Comments:
Post a Comment