விஜய் நடிப்பில் வெளிவந்த படம் நண்பன். இப்படம் இவ்வருடத்தின் எதிர்பார்புக்களுக்குரிய படங்களில் முதலாவதாக இருந்தது. படம் வெளியாகி முன்று நாட்களில் அதிகளவு வசூலை குவித்துள்ளது. இதுவரை 43.5 கோடிக்கு மேல் வசூல் எடுத்துள்ளது. இன்று பொங்கல் தினம் அதனையை ஒட்டி விடுமுறைகள் வருவதால் இப்படத்தின் இரண்டாவது வார வசூலும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் தமிழகம் முழுவதும் 450க்கு மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியது. இதில் சென்னையில் 27 திரையரங்குகளில் வெளியாகியது.
இப்படம் பற்றி நல்ல விமரசங்கள் வெளிவந்துள்ளதால் இப்படத்தின் வசூல் மேலும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் முதலாவது வார இறுதியி 70 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படதுக்குரிய முதல் வார டிக்கெட் விற்று தீர்ந்து விட்டது. இப்படத்துக்கு ரிபிட் பார்வையாளர்கள் வருவதனால் இரண்டாவது வாரமும் நல்ல வசூல் எடுக்கும் என்பது உறுதியாகியுள்ளது. குடும்பம் குடும்பமாகவும் படம் பார்க்க ரசிகர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதுவும் படத்துக்கு பெரிய வெற்றியாகும்.
விஜயின் ஹீரோ இமேயை தாண்டி நல்ல ஒரு படத்தில் நடித்துள்ளார்௦. விஜய்க்கு நடிக்க வராது என்பதை பொய்யாக்கியுள்ளது நண்பன். அனைத்து விமர்சனங்களும் விஜயின் நடிப்பை பாராட்டியுள்ளனர். பஞ்ஞவன் பாரிவேலாக வாழ்ந்துள்ளார் விஜய்.













0 Comments:
Post a Comment