'ஈரம்' படத்தினை தொடர்ந்து 'வல்லினம்' என்னும் படத்தின் பணிகளைத் தொடங்கினார் அறிவழகன். நகுல் நாயகனாக நடிக்க ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பதாக இருந்தது.
ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்த 'வேலாயுதம்' பட வெளியீட்டு பணிகளில் ஈடுபட்டு வந்ததால் 'வல்லினம்' படத்தின் படப்பிடிப்பு நடைபெறவில்லை. தற்போது 'வேலாயுதம்' படத்தின் வரவேற்பிற்கு கிடைத்த உற்சாகத்தால் 'வல்லினம்' படத்தினை பிரம்மாண்டமாக தயாரிக்கமுடிவு செய்து இருக்கிறார்களாம்.
'வல்லினம்' படத்தில் சிறு சிறு மாற்றங்கள் செய்தால் நன்றாக இருக்குமே என்று முடிவு செய்ததோடு பட நாயகனாக ஜெய்யை ஒப்பந்தம் செய்து படத்தினை தொடரலாம் என்று முடிவு செய்து இருப்பதாக கூறுகிறார்கள் படக்குழுவினர்.
'எங்கேயும் எப்போதும்' படத்தினை தொடர்ந்து, நல்ல இயக்குனர், பெரிய படக் கம்பெனி தயாரிப்பில் வாய்ப்பு கிடைத்து இருப்பதால் உற்சாகத்தில் இருக்கிறாராம் ஜெய்













0 Comments:
Post a Comment