இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Thursday, September 29

யோஹன் படத்துக்காக தயாராகும் விஜய்


இளைய தளபதி விஜய் கொலிவுட்டில் ‘வேலாயுதம்’, ‘நண்பன்’ போன்ற படங்களில் நடித்து வருகின்றார். தற்போது இயக்குனர் கெளதம் மேனன், நாயகன் ஜீவா-நாயகி சமந்தா நடிப்பில் உருவாகும் ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் மும்மரமாக இருக்கின்றார். அடுத்த வருட துவக்கத்தில் ‘யோஹன்’ படத்துக்கான வேலைகள் துவங்கும் என்பதால் இப்போதிலிருந்தே படத்தின் நாயகன் விஜய் தயாராகி வருகிறார் என்கிறது பட வட்டாரம்.

விஜய்க்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் இது வித்தியாசமான படமாக இருக்கும். தனது பாணி படங்களில் இருந்து விஜய் சற்று விலகி, கொலிவுட்டின் முன்னணி இயக்குனர்களான ஷங்கர், கெளதம் மேனன், முருகதாஸ் ஆகியோரின் படங்களில் வித்தியாசமாக முயற்சிக்க களமிறங்கியுள்ளார். இதனால் விஜய்யின் ‘நட்சத்திர நாயகன்’ அந்தஸ்து மேலும் பல மடங்கு மிளிரும் என பட வட்டாரம் எதிர்பார்க்கிறது.


இளைய தளபதி பிரபல டெலிகாம் விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தம்


vijay-suriya-29-09-11

ஆரம்பகாலத்தில் தமிழ் சினிமாவை சார்ந்த நடிகர்கள் விளம்பரங்களில் நடிப்பதையே தவிர்த்து வந்தார்கள். தமிழில் வரும் விளபரங்களில் கூட ஷாருக்கான், அமிதாப் போன்றவர்களே ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள் ஆனால் இன்று நிலைமையே மாறிவிட்டது. சூர்யா, விஜய், விக்ரம் என்று அனைவரும் விளம்பரங்களில் நடித்துவருகிறார்கள்.

ஒரு பிரபல டெலிகாம் விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் விஜய்க்கு ரூ.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது வேலாயுதம், நண்பன் சூட்டிங் இறுதி பணியில் இருக்கும் விஜய், இப்படங்களை முடித்த பின்னர், டெலிகாம் விளம்பரம் சூட்டிங்கில் பங்கேற்க இருக்கிறார். இதற்காக அவர் மூன்று நாள் கால்ஷீட்டும் கொடுத்துள்ளார்

பாண்டிச்சேரியில் வேலாயுதம் படப்பிடிப்பு



வேலாயுதம் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் இன்று நடைபெற்றது. விடுபட்ட சில காட்சிகள் இன்று எடுக்கப்பட்டது. விஜய் மற்றும் வில்லன் இடையேயான சண்டைகாட்சிகள் மற்றும் சில வசன காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு இன்றுடன் படப்பிடிப்பு முடிவடைந்து பூசணிகாய் உடைக்கப்பட்டது

Tuesday, September 27

என் டைரக்ஷனில் விஜய் நடிக்கணும் விஷாலின் ஆசை..!


தீபாவளிக்கு இன்னும் ரெண்டே வாரம்தான் இருக்கிறது. அதற்குள் வெடி வெடிக்க கிளம்பியிருக்கிறார் விஷால். இவரது நடிப்பில் வெளிவரவிருக்கும் வெடி, இம்மாதம் 30 ந் தேதி ரிலீஸ். கொஞ்சம் பொறுத்திருந்தா தீபாவளிக்கே வந்திருக்கலாமே என்றோம். இப்போ வரப்போகிற லீவ் நாட்களையும் மனசுல வெச்சுகிட்டுதான் இப்போ ரிலீஸ் செய்யுறோம் என்றார். (நவராத்திரி லீவ், மற்றும் காலாண்டு விடுமுறை என்று கணக்கு பண்ணி களம் இறங்கியிருக்கிறார்கள்).

தீபாவளிக்கு புதுப்படங்கள் வரும்போது வெடி காணாமல் போய்விடுமே என்றால், இல்ல பாஸ். நிஜம் என்னன்னா எவ்வளவு பெரிய படமா இருந்தாலும் ரெண்டே வாரம்தான் தாங்குது. அதுமட்டுமல்ல, சென்னையில் மட்டும் 25 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸ் பண்ணியிருக்கோம். இதே ரேஞ்சில்தான் தமிழகம் முழுக்க வெளியிட்டிருக்கிறோம். கலெக்ஷன் பிரமாண்டமா இருக்கும் என்றவர், அதன்பின் பேசியது எல்லாமே வெடியை சுற்றிய விஷயங்கள்தான்.

தெலுங்கில் வெற்றி பெற்ற எந்தவொரு படத்தையும் நான் ரீமேக் பண்ணனும்னு நினைப்பேன். அதையும் மீறி வேறு யாராவது ஹீரோ அந்த படங்களில் நடிப்பதற்காக கமிட் ஆகிட்டா என்னால தாங்கவே முடியாது. உறக்கமே வராது. அப்படி கை நழுவிப்போச்சே என்று நான் கவலைப்பட்ட படம் சந்தோஷ் சுப்ரமணியம். ஜெயம் ரவி என்னோட பெஸ்ட் பிரண்டுன்னா கூட, பொறாமையா இருந்திச்சு. தெலுங்கில் சவுரியம் வந்தபோதும் நான் அப்படிதான் ஃபீல் பண்ணினேன். இந்த படத்தை தமிழ்ல நாம பண்ணனும்னு தோணுச்சு. ரைட்ஸ் வாங்கியதும் நான் நினைச்ச ஒரே டைரக்டர் பிரபுதேவா மாஸ்டர்தான்.

சவுரியம் படத்தை விட இதை ரொம்ப அற்புதமாக திரைக்கதை அமைச்சு இயக்கியிருக்கிறார். அவன் இவன் படத்தில் நடித்த பின்பு என்னோட பர்ஃபாமென்ஸ் பற்றி ரசிகர்கள் நிறைய பேசினாங்க. இந்த படம் அந்த நல்ல பெயரை காப்பாற்றி கொடுக்கும். அதுமட்டுமல்ல, அந்த படத்திற்கு இணையா இதில் பர்ஃபார்ம் பண்ணியிருக்கேன் என்றவரிடம் நீங்க எப்போ டைரக்டராக போறீங்க என்றோம். அதற்கு அவர் சொன்ன பதில், இன்டஸ்ட்ரியையே திரும்ப வைக்கிற பதில்.

விஜய்க்காக ஒரு கதை வச்சுருந்தேன். நடிச்சா அவர் மட்டும்தான் அதில் நடிக்க முடியும். அவர் சம்மதிச்சா இப்பவும் நான் ரெடி என்றார். இனிமேல் இது பற்றி விஜய்தான் சொல்லணும்…

Monday, September 26

ஒன்றாக விளையாடும் 'தல', 'தளபதி' குழந்தைகள்!

Ajith with daughter Anoushkaஇளையதளபதி விஜய்யின் பிள்ளைகளும், தல அஜீத் குமாரின் மகளும் குளோஸ் நண்பர்களாம். இருவரும் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமாக பழகி வருகின்றனராம். ஒருவர் வீட்டுக்குச் சென்று ஒருவர் விளையாடி மகிழ்கின்றனர்.

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா ஷாஷாவும், அஜீத் குமார் மகள் அனோஷ்காவும் தோஸ்த். பள்ளி விடுமுறை நாட்களில் விஜய் குழந்தைகள் தல வீட்டுக்கு வந்து அனோஷ்காவுடன் விளையாடுகின்றனர். அதே போல் அனோஷ்காவும் விஜய் வீட்டுக்கு சென்று சஞ்சய், ஷாஷாவுடன் விளையாடுகிறாள்.

அனோஷ்காவை ஷாலினி அழைத்துச் செல்ல, விஜய் குழந்தைகளை அவரது மனைவி சங்கீதா அழைத்து வருகிறார். ஆக மொத்தம் இரண்டு குடும்பங்களும் நட்புறவு பாராட்டுகின்றனர்.

மகள் அனோஷ்கா அப்பாவை செல்லமாக அஜீத் குமார் என்றுதான் அழைக்கிறாளாம். இதைக் கேட்டதும் தல உருகிப் போய் விடுகிறாராம்.

Saturday, September 24

அக்டோபர் 25-ம் தேதி திரையில் விஜயின் வேலாயுதம்..!

வேலாயுதம்இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வேலாயுதம்’ திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளிவரும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி இதன் ரிலீஸ் தேதியை தற்போது மாற்றி அறிவித்துள்ளனர் ஜெயம் ராஜாவின் இயக்கத்தில், விஜய் ஆண்டனியின் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா, ஹன்சிகா மோட்வானி ஆகியோர் நடித்துள்ளனர். விஜயின் பாசமிகு தங்கையாக சரண்யா மோகன் நடித்துள்ளார் இப்படம் தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது அக்டோபர் 25-ம் தேதியே திரைக்கு வருகிறதாம்

Thursday, September 22

நானும் அஜீத்துமா..?! ஜெயம் ராஜா


பில்லா 2' படத்தினை அடுத்து ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் அஜீத்.

இப்படத்தினை விஷ்ணுவர்தன் தெலுங்கில் இயக்கி வரும் 'SHADOW' படத்தினை முடித்தவுடன் அஜீத்தை இயக்குவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அஜீத், ஜெயம் ராஜா இணைந்து 'DOOKUDU' என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்கை தமிழில் பண்ண இருப்பதாகவும், அதை தான் ஏ.எம் ரத்னம் இயக்குவார் என்ற செய்தி கடந்த 2 நாட்களாக கோடம்பாக்கத்தை வலம் வருகின்றன.

இதுகுறித்து ஜெயம் ராஜா கூறியிருப்பது " 'வேலாயுதம்' மற்றும் 'மங்காத்தா' ஆகிய 2 படங்களின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது நானும் அஜீத்தும் சந்தித்தோம். அப்போது சாதாரணமாக பேசிக் கொண்டோமே தவிர, இருவரும் இணைந்து படம் பண்ணுவது குறித்து எதுவும் பேசவில்லை.

தற்போது எனது கவனம் முழுவது 'வேலாயுதம்' படத்தில் மட்டுமே இருக்கிறது. எனது அடுத்த படம் குறித்து இன்னும் நான் யோசிக்க கூட இல்லை " என்று தெரிவித்துள்ளார்

காஷ்மீர் தாள் ஏரியில் வேலாயுதம் பட பாடல் காட்சி



எம்.ஜி.ஆர் பாணியில் தனது படங்களுக்கு தலைப்பு வைத்து வந்த விஜய்,

எம்.ஜி.ஆர் பாணியில் தனது படங்களுக்கு தலைப்பு வைத்து வந்த விஜய்,

எம்.ஜி.ஆருக்கு திருப்பு முனையாக அமைந்த படங்களின் புகழ்பெற்ற லொக்கேஷன்கள் மீதும், தனது செண்டிமெண்ட் பார்வையைத் திருப்பியிருகிறார்.

தற்போது விஜய் இருப்பது காஷ்மீரின் தாள் ஏரியில். அதுவும் ஒன்றுக்கு இரண்டு ஹீரோயின்களோடு முகாமிட்டு இருகிறார் விஜய்! வேலாயுதம் படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இதில் இறுதியாக எஞ்சியிருந்தது ஒரு டூயட் பாடல் மட்டுமே. இதுஒரு டூயட் பாடல். இதில் ஹன்ஷிகா, ஜெனலியா இரண்டுபேருமே இருகிறார்கள்.
எம்.ஜி.ஆருக்கு திருப்பு முனையாக அமைந்த படங்களின் புகழ்பெற்ற லொக்கேஷன்கள் மீதும், தனது செண்டிமெண்ட் பார்வையைத் திருப்பியிருகிறார்.


இந்த டூயட் பாடலை முதலில் சுவிஸ்சர்லாந்தில் படம் பிடிக்க திட்டமிட்டு இருந்த நிலையில், நண்பன் படத்தின் படப்பிடிப்பிலும் இம்மாதம் 25-ஆம் தேதிமுதல் மீண்டும் பங்கேற்க இருப்பதால் சுவிஸ் நாட்டுக்கு இணையான லொக்கேஷன்கள் கொண்ட காஷ்மீரின் ஸ்ரீநகர் மற்றும் தாள் ஏரியில் படம் பிடிப்பது என்ற யோசனையை வழங்கிவர் விஜயின் அப்பா என்கிறார்கள் படக்குழுவில்.
இதைவிட முக்கியமான விஷயம், விஜயின் படம் தாள் ஏரியில் படம் பிடிக்கப்படுவது இதுவே முதல் முறை. அன்பே வா படத்துக்காக எம்.ஜி.ஆர் ஏரியில் நடத்தப் பட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டு திரும்பிய பிறகே திமுகவில் மிக்கியத்துவம் பெற்றார் என்று எஸ்.ஏ.சியிடம் அவரது வெல் விஷ்சர்கள்(?) சொல்ல, தாள் ஏரியை தேர்வு செய்தார்களாம்!



Wednesday, September 21

பொங்கல் திருநாளில் நண்பன்..!

விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிக்கும் படம் 'நண்பன்'. ஷங்கர் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். ஜெமினி பிலிம் சர்க்கியூட் தயாரித்து வருகிறார்கள்.

தீபாவளி வெளியீடு என்று ஆரம்பிக்கப்பட்ட படம் தான் 'நண்பன்'. ஆனால் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வேலாயுதம்' படத்தின் தாமதத்தால் 'நண்பன்' எப்போது வெளியிடப் போகிறார்கள் என்று தெரியாமல் இருந்தது.

தீபாவளிக்கு 'வேலாயுதம்' உறுதி செய்யப்பட்டு உள்ளதால் 'நண்பன்' படத்தினை பொங்கல் தினத்தன்று வெளியிடலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.

'நண்பன்' படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு 2012 பொங்கலுக்கு வெளியிட இருக்கிறார்கள்.

இந்தி '3 இடியட்ஸ்' படத்தின் ரீமேக் என்பதால் இந்தியில் நாயகனாக நடித்த அமீர்கானை அழைத்து இப்படத்தின் இசையை வெளியிடலாமா என்று ஆலோசித்து வருகிறதாம் படக்குழு.

Tuesday, September 20

நண்பன் படத்தின் ஆடியோ அக்டோபர் 10ம் தேதி வெளியிட முடிவு?



ஹிந்தியில் அபார வெற்றி பெற்ற ‘3 இடியட்ஸ்’ படத்தினை, தமிழில் ‘நண்பன்’ என்ற பெயரில் ரீமேக்கி வருகிறார் பிரமாண்ட இயக்குனரான ஷங்கர். இப்படத்தில் இலியானா கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இப்படத்தில் ஆடியோ ரிலீஸ் ஆகும் தேதி உத்தேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்க இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பாடல்கள் அநேகமாய் அக்டோபர் 10-ம் திகதி வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

இப்படத்தில் சத்தியராஜ், எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் கௌரவ வேடத்தில் நடித்து இருக்கிறார்களாம்.

Monday, September 19

காஷ்மீரில் விஜய் பட ஷுட்டிங் !


விஜய், ஹன்சிகா, ஜெனிலியா மூவரும் இடம் பெறும் பாடல் காட்சியை படமாக்க காஷ்மீர் சென்று இருக்கிறது 'வேலாயுதம்' படக்குழு. படத்தில் ஒரு பாடலில் இரு நாயகிகளும் இடம் பெறுகிறார்களாம்.

முதலில் ஸ்விட்சர்லாந்தில் தான் இந்த பாடலை படமாக்க திட்டமிட்டார்களாம். இறுதியில் காஷ்மீர் ஸ்ரீநகர் அருகில் உள்ள டால் ஏரியின் அருகில் படப்பிடிப்பு நடத்தினால் நன்றாக இருக்கும் என்று கருதி அங்கு சென்று இருக்கிறார்கள்.

செப் 21 வரை அங்கு பாடல் காட்சியை படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்பாடலை தவிர மீதி படப்பணிகள் அனைத்தும் முடிந்து தயாராக இருக்கிறதாம்.

அக்டோபர் 26ம் தேதி தீபாவளி தினத்தன்று 'வேலாயுதம்' திரைக்கு வர இருக்கிறது.

Friday, September 16

நடிகர் ஜீவாவின் கையேந்திபவன்ஹோட்டலில் இயக்குனர் ஷங்கர்


சினி ஸ்டார்களை வைத்து ஃபாஷன் ஷோ நடத்துவது மும்பையில் மட்டும் நடந்து வந்தது. இப்போது சென்னைக்கும் பரவிவிட்டது. கடந்த வாரம¢ நடந்த ஒரு நிகழ்ச்சியில் அமலாபால், சினேகா இருவரும் கலந்துகொண்டு பூனை நடை நடந்து வந்தார்கள். டீ ஷர்ட், ட்ராக் பேண்ட்ஸில் நிகழ்ச்சிக்கு வந்த அமலா, அடுத்த நொடியில் அட்டகாசமான புடவைக்கு மாறிவிட்டார். நிகழ்ச்சி முடிந்ததும் அவர்களை சந்திக் கலாம் என்று பத்திரிகையாளர்கள் காத்திருக்க, இருவரும் ரகசியமாய் எஸ்கேப். என்ன அவசரமோ?

நடிகர் ஜீவா புதிதாகத் திறந்துள்ள ‘ஒன்.எம்.பி.’ ஹோட்டல் திறப்புவிழாவிற்கு வந்த ஷங்கர் பிரமித்தார். காரணம், உள்ளே நுழைந்ததும் இரண்டு பக்கமும் கையேந்திபவன் போல அமைத்திருந்த செட். ‘‘ஜீவா இந்தியாவிலிருக்கும் முக்கிய நகர ஹோட்டல்களுக்குப் போய் உணவை டேஸ்ட் பண்ணி அதையெல்லாம் ஒரே இடத்தில் கொண்டு வந்திருக்கிறார். இந்த உழைப்புக்கு நான் மரியாதை செய்யணும்னு நினைச்சு வந்தேன்’’ என்று சொன்ன ஷங்கர், எல்லா ஐட்டங்களையும் ஸ்பூனில் எடுத்து சாப்பிட்டுப் பார்த்தார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் மகன் மரணம்



விபத்தில் காயமடைந்த காங்கிரஸ் எம்.பி. அசாருதீன் மகன் நேற்று காலை இறந்தார். இந்திய கிரிக்கெட்
அணியின் முன்னாள் கேப்டனும், காங்கிரஸ் எம்.பி.யுமான அசாருதீனின் மகன் அயாசுதீன், ஐதராபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்தில் சிக்கினார். 19 வயதான அயாசுதீனும், அசாருதீன் சகோதரியின் மகன் அஜ்மல் (16) என்பவரும் சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென கவிழ்ந்ததில் அஜ்மல் இறந்து விட்டார்.

மோட்டார் சைக்கிளை ஓட்டிய அயாசுதீனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தலை, மார்பு, வயிறு ஆகிய இடங்களில் ஏற்பட்ட காயம் காரணமாக அதிக ரத்த போக்கு ஏற்பட்டதால் அபாய கட்டத்தில் இருந்த அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் அயாசுதீன் நேற்று காலை இறந்தார். இது பற்றிய தகவல் கிடைத்ததும்,

ஆந்திரா முதல்வர் கிரண் குமார் ரெட்டி மருத்துவமனை சென்று அயாசுதீன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அயாசுதீன் ஐதராபாத்தில் உள்ள செயின்ட் மேரீஸ் கல்லூரியில் படித்து வந்தார். அப்பாவை போல் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவர். ஸ்டேட் வங்கியின் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்தார்

Thursday, September 15

ஹன்சிகாவின் காமெடி, ரசிக்கும்படியாக இருக்கும். டைரக்டர் ராஜா



வேலாயுதம்’ படத்தில் ஹன்சிகாவின் காமெடி ரசிக்கும்படியாக இருக்கும் என்று டைரக்டர் ராஜா கூறினார். ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் ஏராளமான பொருட்செலவில் தயாரித்துள்ள படம், ‘வேலாயுதம்’. விஜய், ஜெனிலியா, ஹன்சிகா, சரண்யா மோகன், சந்தானம் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தை இயக்கும் ராஜா கூறியதாவது: சாதாரண கிராமத்து இளைஞன், பெரிய தலைவன் ஆகும் அளவுக்கு எப்படி உயர்கிறான் என்பது கதை. விஜய் இதுவரை நடித்த படங்களில் இருந்து இது வேறுவிதமாக இருக்கும். காமெடி, ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மெசேஜும் உண்டு. ஹன்சிகா, ஜெனிலியா இருவரது கேரக்டருமே பேசப்படும் விதமாக இருக்கும். இதுவரை அப்பாவி பெண்ணாக நடித்து வந்த ஜெனிலியா, இதில் சீரியஸ் கேரக்டரில் நடித்துள்ளார். ஹன்சிகாவின் காமெடி, ரசிக்கும்படியாக இருக்கும். விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, எல்லோரும் கொண்டாடும் விதமான படம் இது. ஆக்ஷன் காட்சிகளில் விஜய் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளன. பிரியனின் கேமராவும் படத்துக்கு பக்கபலமாகியிருக்கிறது. பட வேலைகள் முடிந்துவிட்டன. தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இவ்வாறு ராஜா கூறினார்

படப்பிடிப்பில் ஜெனிலியா – ஹன்சிகா மோதல்

பொதுவாக நடிகைகள் இடையே போட்டி, பொறாமைகள் அதிகமாக இருக்கும். அதிலும் ஒரே படத்தில் இரண்டு முன்னணி நாயகிகள் சேர்ந்து நடித்தால் கேட்கவா வேண்டும்.

விஜய் நடிப்பில் ஜெயம் ராஜா இயக்கி விரைவில் வெளிவர இருக்கும் “வேலாயுதம்” படத்தில் தான் நடிகை ஜெனிலியாவும், ஹன்சிகா மோத்வானியும் யார் பெரியவர்கள் என்று மோதிக் கொண்டார்களாம்.

இதுகுறித்து படத்தின் இயக்குநர் ஜெயம் ராஜா கூறுகையில், ஜெனிலியாவுக்கும், ஹன்சிகாவுக்கும் இடையே யார் பெரியவர்? என்ற ஈகோ இருந்தது உண்மைதான். ஆனால் அதை இருவரும் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

நேரில் பார்த்தால் சிரித்துக்கொள்வார்கள். ஆனால் உள்ளுக்குள் போட்டி மனப்பான்மையை வைத்துக்கொண்டு வெளியில் சினேகிதிகள் போல் நடிப்பார்கள். பொதுவாக 2 கதாநாயகிகள் சேர்ந்து நடிக்கும் போது இப்படிப்பட்ட சூழ்நிலைகள் உருவாவது இயல்புதான்.

ஜெனிலியா, ஹன்சிகா இருவரும் மும்பையை சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்கும் இடையே போட்டி கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

ஆனால் பிரச்சினை எதுவும் இல்லை. படத்தில் இரண்டு பேருக்குமே சமமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதனால் படப்பிடிப்புக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் சுமூகமாக நடந்தது.

மேலும் விஜய் குறித்து கூறும்போது, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு “எங்க வீட்டு பிள்ளை” போல், கமலுக்கு “தசாவதாரம்” போல், விஜய்க்கு “வேலாயுதம்” படம் அமையும் என்று கூறினா

Wednesday, September 14

தயாரிப்பாளர் சங்கத்தில் கோடிக்கணக்கில் ஊழல் . போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு

கேபிள் டி.வி.களுக்கு சினிமா பாடல்கள், நகைச்சுவை காட்சிகள் ஒளிபரப்ப அனுமதி வழங்கியதில், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ரூ.1 கோடியே 80 லட்சம் ஊழல் நடந்துள்ளதாக நேற்று போலீஸ் கமிஷனரிடம் 60 தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொறுப்புத் தலைவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமையில் நேற்று மாலை ஏராளமான சினிமா தயாரிப்பாளர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.தாணு உள்பட சிலர் கமிஷனர் திரிபாதியை சந்தித்து பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

புகார் மனு கொடுத்துவிட்டு வெளியே வந்தவுடன் எஸ்.ஏ.சந்திரசேகரன், நிருபர்களிடம் கூறுகையில், "கடந்த மே மாதம் 13-ந் தேதி அன்று தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ராம.நாராயணன், பொதுச்செயலாளர் சிவசக்தி பாண்டியன் ஆகியோர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்கள். துணைத்தலைவர்களாக இருந்த நானும், அன்பாலயா பிரபாகரனும் பதவி விலகினோம்.

பின்னர் அனைவரது ஆதரவோடும் நான் பொறுப்பு தலைவராக பதவி ஏற்றேன். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றவுடன் சங்கத்தில் பல முறைகேடுகளும், ஊழல்களும் நடந்துள்ளதாக எனக்கு கடிதம் வாயிலாகவும், வேறு தகவல்கள் மூலமும் புகார்கள் வந்தன.

எனவே அதன் அடிப்படையில் பொதுக்குழுவை கூட்ட விரும்பினேன். கூட்ட முடியாமல் பல தடங்கல்கள் வந்தன. இறுதியாக 11-ந் தேதி அன்று சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் 230 பேர் கலந்து கொண்டனர்.

அந்த கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. நான் அவற்றை எழுத்து மூலமாக கொடுக்குமாறு கேட்டேன். அதன்படி எழுத்து மூலமாக புகார் கொடுத்துள்ளனர். 60 பேர் இந்த புகாரை கொடுத்துள்ளனர். அந்த புகார் மனு இப்போது போலீஸ் கமிஷனரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து கேபிள் டி.வி.களுக்கு சினிமா பாடல்களையும், நகைச்சுவை காட்சிகளையும் ஒளிபரப்புவதில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டது.

விண் மீடியா, ஜே.கே.மீடியா ஆகிய கேபிள் டி.வி. நிறுவனங்களோடு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்த கேபிள் டி.வி. நிறுவனங்களிடமிருந்து வசூலித்த தொகையில் ரூ.1.80 கோடி அளவுக்கு ஊழல் மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளது. அந்த பணத்தை திரும்பவும் வசூலித்து தரும்படி கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளோம். அந்த தொகை கிடைத்தால் ஏழை-எளிய தயாரிப்பாளர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும். இதில் குற்றம்புரிந்தவர்கள் யார் என்பதை போலீசார்தான் விசாரித்து கண்டுபிடிக்க வேண்டும்.

2007-லிருந்து 2010-ம் ஆண்டுவரை 4 ஒப்பந்தங்களை மாறி மாறி போட்டுள்ளனர். விண்மீடியா, ஜே.கே.மீடியா நிர்வாகிகளை அழைத்து விசாரித்தால் உண்மை தெரிந்துவிடும்," என்றார்.

யார் குற்றவாளி?

உடனே ஒரு நிருபர், "தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள பிரச்சினையை நீங்களே பேசி தீர்க்காமல் போலீஸ் வரை வந்து புகார் கொடுத்துள்ளீர்களே?" என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சந்திரசேகரன், "அதுதொடர்பாக பேசுவதற்கு அவர்கள் யாரும் வரவில்லை. பதவியை ராஜினாமா செய்துவிட்டு போய்விட்டார்கள்," என்றார்.

"ராம.நாராயணன் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளதா?", என்று கேட்கப்பட்டதற்கு, "யார் குற்றவாளி என்பதை போலீசார்தான் விசாரித்து முடிவு செய்யவேண்டும். இந்த மாதத்தோடு கேபிள் டி.வி. உரிமையாளர்களுக்கு வழங்கிய உரிமை முடிந்துவிட்டது. தற்போது கேபிள் டி.வி.யை அரசுடைமையாக்கி முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இனிமேல் ஒப்பந்தத்தை மீறி கேபிள் டி.வி.யில் சினிமா பாடல்களையோ, நகைச்சுவை காட்சிகளையோ ஒளிபரப்பக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்," என்றார் எஸ்.ஏ.சந்திரசேகரன்

Tuesday, September 13

பாடல் சூட்டிங்கிற்காக காஷ்மீர் செல்லும் வேலாயுதம் டீம்!

விஜய், ஹன்சிகா, ஜெனிலியா மற்றும் பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் படம் 'வேலாயுதம்'. இப்படத்தினை ஜெயம் ராஜா இயக்க, விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து வருகிறார்.

இப்படம் குறித்து ஜெயம் ராஜா " விஜய் சார் குழந்தைகளுக்கும் குடும்பத்தினருக்கும் பிடித்தவர். என் பாதையும் அதுதான். குழந்தைகள் மற்றும் குடும்பதினரை நோக்கியே என் படமும் இருக்கும். இந்த ஒத்த சிந்தனையால் எங்களுக்குள் கண்ணுக்கு தெரியாத இணக்கமும் நெருக்கமும் இறுக்கமும் வந்து விட்டன.

'வேலாயுதம்' தீபாவளிக்கு வருகிறது. விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் கொண்டாட்டமான ஒரு படமாக இருக்கும். ஹீரோயிசத்தை சரியாகப் பயன்படுத்தி வெளிப்படுத்தியிருக்கும் படமாக இது இருக்கும்.

ஜெனிலியா, ஹன்சிகா என இரு நாயகிகளுக்குமே என்மேல் கடைசி வரை ஒரு சந்தேகம் இருந்தது. படத்தில் யாருக்கு முக்கியத்துவம் என்கிற சந்தேகம் அது. படத்தில் இருவருக்கும் சமவாய்ப்பு இருக்கிறது. படம் வெளியான பிறகு வகையில் இருவரும் பேசப்படுவார்கள்.

நட்சத்திரங்களின் ஒத்துழைப்பைப் போல தொழில் நுட்ப கலைஞர்களும் ஈடுபாட்டுடன் உழைத்து இருக்கிறார்கள்.இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி 'வேட்டைக்காரன்' பாடல்களைத் தாண்டி பேசப்பட வேண்டும் என்று கடுமையாக பாடுபட்டார். அதனால் தான் அவர் போட்டுக் காட்டிய 6 மெட்டுகளும் முதல் முறையிலேயே பிடித்துப் போய் பாடலாயின. அதனால்தான் ஆடியோ விற்பனையிலும் 'வேலாயுதம்' சாதனை படைத்தது.

தயாரிப்பாளர் ரவிசார் பற்றி சொல்ல வேண்டியதில்லை. படம் நன்றாக வர அவர் ஆகாயம் வரை மேலே போவார். பாதாளம் தாண்டியும் கீழே செல்பவர். ஒரு காட்சிக்கும் ஒரு லட்சம் பேர் தேவைப்பட்டது. ஏன் எதற்கு என்று கேட்கவில்லைல் ஏற்பாடு செய்து விட்டார்.. அதுவும் கேரளாவில்... அசந்து போய் விட்டேன்.

இதுவரை 150 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. பொள்ளாச்சி, சென்னை, கொச்சி, லடாக், ஹைதராபாத், விசாகப்பட்டினம், ஒரிசா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. பாக்கியுள்ள ஒரு பாடலுக்காக காஷ்மீர் செல்ல இருக்கிறோம்.

தமிழ் ரசிகர்களுக்கு புத்தம் புது அனுபவமாக வேலாயுதம் அமையும் வகையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. " என்று தெரிவித்துள்ளார்

Monday, September 12

இளைய தளபதி விஜய் படத்தில் சந்தோஷம்' சிவன் !


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய் என்ற செய்தி வெளியானதில் இருந்து அப்படத்தினை பற்றி தினமும் ஒவ்வொரு செய்தி வெளியாகி வருகிறது.

படத்தினை விஜய்யின் அப்பா சந்திரசேகரனும் ஆஸ்கார் ரவிச்சந்திரனும் சேர்ந்து தயாரிக்கிறார்கள். ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் படத்தினை வெளியிட இருக்கிறது. Kingfisher calendar மாடலான ஏஞ்சலா ஜான்சனை இப்படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.

புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து சந்தோஷ் சிவன் " ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்தி 'கஜினி' படத்திற்கே நான் ஒளிப்பதிவு செய்வதாக இருந்தது. சிலபல காரணங்களால் அது முடியாமல் போய்விட்டது. விஜய்யின் படங்கள் எனக்கு பிடிக்கும். இந்த இருவரும் இணையும் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றப் போவதில் எனக்கு சந்தோஷம்.

நான் இயக்க இருந்த 'சிலோன்' படத்தினை துவங்க சில காலம் ஆகும். அந்த இடைவெளியில் இந்த படத்தின் ஒளிப்பதிவினை மேற்கொள்ள இருக்கிறேன். படத்தினை விரைவில் துவங்க இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் விஜய் மற்றும் ஏஞ்சலா இருவரையும் வைத்து சந்தோஷ் சிவன் இப்படத்திற்காக ஃபோட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

Sunday, September 11

மீண்டும் தெலுங்குக்கு ஜம்பாகி இருக்கும் ஹன்சிகா?

விஜய்யுடன் தற்போது ‘வேலாயுதம்’ படத்தில் நடித்திருக்கும் ஹன்சிகா மோட்வானி, அதே சமயத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படங்களுக்குப் பிறகு இவர் தமிழில் எந்த படங்களையும் ஒத்துக் கொள்ளவில்லை.
காரணம் என்னவென்று நடிகையின் தரப்பில் விசாரித்துப் பார்த்தால், ‘தமிழிலே துட்டு அவ்வளவா வெட்ட மாட்டேன்கிறார்கள்.

தெலுங்கிலோ பாப்பாவுக்கு நிறைய துட்டு வெட்டறோம்னு சொல்லிருக்கிறார்.அதான் ஹன்சி பாப்பா தெலுங்குக்கு ஜம்பாகி இருக்கு’ என்றார்கள்.

Saturday, September 10

ரஜினி, கமல், விஜய், அஜீத்துக்கு அழைப்பு

ரஜினி, கமல், விஜய், சூர்யா, அஜீத்துக்கு அழைப்பு: நடிகர் சங்க பொதுக்குழு நாளை கூடுகிறது: உறுப்பினராகாத நடிகைகளுக்கு தடை
நடிகர் சங்க பொதுக்குழு நாளை காலை 10.30 மணிக்கு தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடக்கிறது. தியாகராயநகரில் உள்ள நடிகர் சங்க கட்டிடம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்படுவதால் முதல் தடவையாக சங்க வளாகத்துக்கு வெளியே இப்பொதுக்குழு கூடுகிறது.
நடிகர் சங்கத்தில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அனைவருக்கும் பொதுக்குழுவில் தவறாது கலந்து கொள்ளும்படி வலியுறுத்தி கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன.
ரஜினி, கமல், விஜய், சூர்யா, அஜீத், விஷால், பரத், ஜீவா, ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கும் பொதுக்குழுவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்து கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளது. நடிகைகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர்.
இப்பொதுக்குழுவில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. பெப்சி தொழிலாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே சம்பள பிரச்சினையில் மோதல் போக்கு உருவாகி உள்ளது. இதனால் புதுப்படங்களுக்கு பூஜை போட தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. இந்த நடவடிக்கை நடிகர், நடிகைகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. புதுப்படங்களில் நடிக்க முடியாமல் பலர் வீட்டில் இருக்கின்றனர். இப்பிரச்சினை குறித்து பொதுக்குழுவில் விவாதிக்கப்பட உள்ளது.
நடிகர், நடிகைகள் அனைவரும் நடிகர் சங்கத்தில் கண்டிப்பாக உறுப்பினராக வேண்டும் என்று நடிகர் சங்கம் ஏற்கனவே வலியுறுத்தி உள்ளது. ஆனாலும் வடக்கில் இருந்து வந்த புது நடிகைகள் இன்னும் உறுப்பினராக பதிவு செய்யவில்லை. உறுப்பினராகாதவர்களுக்கு நடிக்க தடைவிதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
நடிகர், நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் போன்றோர் வற்புறுத்தி வருகின்றனர். இதுகுறித்து பொதுக்குழுவில் ஆலோசிக்கப்பட உள்ளது.



நண்பன் பட சூட்டிங்கில் இலியானா கால் முறிந்தது





டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படமான “நண்பன்” பட சூட்டிங்கில் நடிகை இலியானா கால் முறிந்தது. பிரபல தெலுங்கு நடிகை இலியானா. இவர் விஜய் ஜோடியாக “நண்பன்” படத்தில் நடிக்கிறார். ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். “நண்பன்” பட சூட்டிங் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இலியானா ஆடும் பாடல் காட்சி ஒன்றுக்காக அவருக்கு நடன பயிற்சி அளிக்கப்பட்டது. பாலிவுட்டின் பிரபல டான்ஸ் மாஸ்டர் பராஹான் இப்பயிற்சியை அளித்தார்அப்போது இலியானா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது காலில் பலத்த அடிபட்டது. வலியால் துடித்த அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதை கண்டறிந்து சிகிச்சை அளித்தனர். கால் சரியாக மூன்று வாரங்கள் வரை அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து இலியானா ஹைதராபாத் புறப்பட்டு சென்றார். இலியானா தவிர்த்த காட்சிகள் மற்றும் பேட்ச் ஒர்க்கை மட்டும் இப்போது ஷங்கர் மேற்கொண்டு வருகிறார்

Thursday, September 8

வேலாயுதம் பட ஆடியோ ‍-- சாதனை !!

Posted Image


ஆஸ்கர் ரவி சந்திரன் தயாரிப்பில் ஜெயம் ராஜா இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வெளிவர இருக்கும் வேலாயுதம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மதுரையில் 28 ம் தேதி நடைபெற்றது.

தற்போது வேலாயுதம் படத்தின் ஆடியோ கேசட்டுகள் விற்பனையில் சாதனை படைத்துள்ளது என்று அப்படத்தின் ஆடியோ உரிமை பெற்ற சோனி பிஎம்ஜி அறிவித்துள்ளது. கேச‌ட்டுகள் வெளியான ஒரு மணி நேரத்தில் 3 லட்சம் சிடி கேச‌ட்டுகள் விற்பனையாகியுள்ளது, என்றும் கடைசியாக‌ வெளியான மங்காத்தவின் ஆடியோ விற்பனையை இப்படம் முறியடித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது

Wednesday, September 7

நண்பன்' டீம் படப்பிடிப்பில் ஒரே லூட்டி!

இளைய தளபதி விஜய் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் படம் நண்பன், தமிழ் சினிமா முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படப்பிடிப்பில் இளைய தளபதி உட்பட ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா என அனைவரும் பயங்கர லூட்டி அடித்துள்ளனர். படப்பிடிப்புகள் முடிவுற்றதை கொண்டாட இளைய தளபதி விஜய் பார்ட்டி ஒன்றும் ஏற்பாடு செய்திருந்தார். பார்ட்டியில் இளைய தளபதி உட்பட ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா என அனைவரும் நடனம் ஆடி அசத்தினார்களாம். அதுமட்மின்றி, படத்தில் விஜய் புதியதொரு தோற்றத்தில் தோன்றுகிறாராம் என பட வட்டாரங்கள் தெரிவிகின்றன. நண்பன் வரவிருக்கும் 2012 பொங்கல் அன்று வெளிவர இருக்கிறது.

Tuesday, September 6

சீமான் - விஜய் திடீர் சந்திப்பு!

சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'பகலவன்' படத்தின் பணிகள் எப்போது துவங்கும் என்று தமிழ் திரையுலகில் பரபர பட்டிமன்றமாக அடிபட்டது.

இந்நிலையில் கடந்த 5ம் தேதி மாலை விஜய்யிடம் இருந்து சீமானுக்கு திடீர் அழைப்பு. பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேர் தூக்கு விவகாரத்திற்கு நடைபயணம் மேற்கொள்ளும் வேலைகளில் தீவிரமாக இருந்த சீமான், உடனடியாக விஜய்யை சந்தித்தார்.

ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் உடன் இருக்க, மூன்று மணி நேரம் சந்திப்பு நீண்டது.

"பகவலன் படத்தின் கதையை ஏற்கனவே விஜய் கேட்டு விட்டார். அதன் க்ளைமாக்ஸ் 'வேலாயுதம்' படத்தின் காட்சியை போலவே இருந்ததால் அதை மாற்றக் கோரினார். அதன் பிறகு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதாக விளம்பரம் வெளியாக, சீமான் அப்செட்.

இதற்கிடையில் தயாரிப்பாளர் தாணு சீமானை சமாதானப்படுத்தி கதையை மாற்றி எழுதுங்கள். தம்பி விஜய் உங்கள் இயக்கத்தில் நடிப்பது உறுதி என நம்பகம் வார்த்தார். இதையடுத்து, அடுத்த ஒரு சில நாட்களிலேயே க்ளைமாக்ஸை அட்டகாசமாக மாற்றி எழுதினார் சீமான்.

இது தாணுவிற்கு மிகவும் பிடித்துவிட, அது குறித்து விஜய்யிடம் சிலாகித்து பேசி இருக்கிறார். அதன் பிறகே சீமான் - விஜய் சந்திப்பு நடந்து இருக்கிறது.

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸிற்கு எதிராக பிரச்சார வேலைகளை முடித்த உடனேயே 'பகலவன்' படப்பிடிப்பு ஆரம்பமாகும் " என்கிறார்கள் சீமானின் நெருங்கிய புள்ளிகள்

Monday, September 5

முதல் பட வாய்ப்பு கொடுத்த இளைய தளபதி விஜய்: டைரக்டர் பேரரசு பேட்டி


ஈரோடு கவிதாலயம் மற்றும் கவிதாலயம் இசைப்பயிற்சி பள்ளி சார்பில் பிரப்ரோடு ஸ்ரீயாளி ஓட்டலில் அரசு பள்ளிகளில் படிக்கும் 250 ஏழை மாணவ-மாணவிகளுக்கு 2 ஆயிரம் இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. ஸ்ரீ அவதார் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.
ஸ்ரீவாசவி

வெங்கடேசன், தாய் எண்டர்பிரைசஸ் குருநாதன் ஆகியோர் விழாவை தொடங்கி வைத்தனர். இதில் திரைப்பட இயக்குனர் பேரரசு கலந்து கொண்டு மாணவர்களுக்கு தன் சொந்த செலவில் 2 ஆயிரம் இலவச நோட்டு புத்தகங்களை வழங்கி பேசினார். முன்னதாக டைரக்டர் பேரரசு நிருபர்களிடம் கூறியதாவது:-
நாட்டரசன் கோட்டையில் இருந்து சென்னைக்கு வந்து சினிமாத்துறை வாய்ப்புக்காக 15 ஆண்டுகள் போராடினேன். அதற்கு பிரதிபலனாக முதல் படமே நடிகர் விஜய் படமாக அமைந்தது. திருப்பாச்சி படத்தை இயக்க நடிகர் விஜய் தந்தது வாய்ப்பல்ல வாழ்க்கை.
தற்போது திருத்தணி படத்தை இயக்கியுள்ளேன். இதில் பரத், ராஜ்கிரண் ஆகியோர் நடித்துள்ளனர். அந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே திருப்பதி படத்துக்கு கதைக்காக மாநில விருது கிடைத்து. விரைவில் சிவகங்கை என்ற படத்தை இயக்கவுள்ளேன். அது நிச்சயம் விருதை பெற்று தரும்.
நான் ரஜினியின் தீவிர ரசிகன். அவரது படம் ரிலீஸ் ஆனால் 4,5 முறையாகவது பார்த்துவிடுவேன். ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது என் லட்சியம். அவருக்கான கதை தயாராக உள்ளது.
ராணா படத்துக்கு பின்னர் ரஜினியை சந்திப்பேன்.தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை குறைத்தால் திருட்டு சி.டி.யில் பாடம் பார்ப்போரின் எண்ணிக்கை குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கவிதாலயம் விழாவில் பரத நாட்டிய ஆசிரியைகள் யெசுதா கேசவன், தாரணி சண்முகம், சித்ரா சிவகுமார், ரேணுகா ஸ்ரீ ஆகிய ஆசிரியைகளின் 100 மாணவிகள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கவிதாலயம் ராமலிங்கம் செய்திருந்தார். முன்னதாக பேரரசு ஈரோடு வடக்கு ரோட்டரி கிளப் சார்பில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டு ரோட்டரி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இதில் தலைவர் சக்திநல்லசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Sunday, September 4

விஜய் ஜோடியாக கிங் பிஷர் அழகி ஏஞ்சலா ஜான்சன்

நடிகர் விஜய்யின் ‘வேலாயுதம்’, மற்றும் ‘நண்பன்’ படங்களைத் தொடர்ந்து அடுத்து நடிக்கவிருக்கும் புதிய படத்தினை இயக்குபவர் சீமானா, ஏ.ஆர்.முருகதாஸா? என்ற கேள்வி எழுந்தது. தற்போது டைரக்டர் முருகதாஸ் இயக்கத்தில்தான் விஜய் நடிக்கப்போகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதனோடு விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இப்படத்தில், விஜய்யின் ஜோடியாக பாலிவுட் நடிகைகளான பிரியங்கா சோப்ராவை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி கிங்பிஷர் நிறுவனத்தில் மாடலான ஏஞ்சலா ஜான்சன் என்பவரை இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறாராம். இன்னும் பெயரிடப்படாத இப்படம் வரும் அக்டோபர் மாதம் தனது ஷூட்டிங்கை துவங்க இருக்கிறதாம். இந்த ஏஞ்சலா ஜான்சன் பார்ப்பதற்கு ஒரு சாயலில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயைப் போல் இருப்பாராம். இவர் ஒரு ஹிந்திப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம்

ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்



கடவுளோடு ஒப்பிட்டு போஸ்டரோ, செய்திகளோ வெளியிடும் ரசிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று நடிகர் விஜய் எச்சரிக்கை
விடுத்துள்ளார்
இதுபற்றி அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அண்மையில் மக்கள் இயக்கம் சார்பாக, நற்பணி விழாவும் ‘வேலாயுதம்’ இசை வெளியீட்டு விழாவும் மதுரையில் நடந்தது. அப்போது ரசிகர்கள் சிலர், என்னை கடவுளாகச் சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். அதைக் கண்ட அடுத்த கணமே அவர்களை அழைத்து, ‘இப்படியெல்லாம் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது, அகற்றுங்கள்’ என்று கண்டிப்புடன் கூறினேன். அவர்கள் அகற்றிவிட்டனர்.
முடிந்து போன இந்த விஷயத்தை விஷமாக்க, சிலர் முயல்கிறார்கள். நாங்கள் இதயத்தால் ஒன்றிணைந்தவர்கள். எங்களிடையே சாதி, மதம் போன்ற பேதங்களை உருவாக்கி பிரிக்கவோ, பிளவுப்படுத்தவோ யாராலும் முடியாது. நான், மனிதர்களை மனிதர்களாக மட்டுமே பார்ப்பவன். ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறேன். ஆயிரம் பேரை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். அவர்களெல்லாம் என்ன ஜாதி, மதம் என்பது எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்ததெல்லாம் தமிழ், தமிழினம்தான்.
மனிதரை கடவுளாக சித்தரிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அப்படி ஆர்வ மிகுதியால் என் ரசிகர்கள் செய்த அந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். வருங்காலங்களில் கடவுளோடு ஒப்பிட்டு போஸ்டர்களோ, செய்திகளோ வெளியிட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன்.இவ்வாறு விஜய் கூறியுள்ளார்

Friday, September 2

நண்பண் விஜய் லேடஸ்ட் -‍ படங்கள்‍‍

Thursday, September 1

தமிழ் சினிமாவை கலக்கபோகும் நண்பன்..!

ப்போதும் ஷங்கர்... 'நண்பன்’தான். இப்போது இன்னும் பிரத்யேக நட்புடன் புன்னகைக்கிறார். மிஸ்டர் பெர்ஃபெக்ட், மிஸ்டர் பிரமாண்டம்... 'நண்பன்’பற்றிப் பேசுகிறார் உற்சாகமாக!

'' 'த்ரீ இடியட்ஸ்’ உங்க பிராண்ட் படமே இல்லை. அதை ரீ-மேக் செய்கிற முடிவை எப்படி எடுத்தீங்க?''

'' 'எந்திரன்’ ஷூட்டிங்கின் பரபர டென்ஷனுக்கு இடையில்தான் 'த்ரீ இடியட்ஸ்’ படம் பார்த்தேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமப் போய்ப் பார்த்த படம், ஸீனுக்கு ஸீன் அப்படியே மெஸ்மரிசம் பண்ணிருச்சு. படம் பார்த்துட்டு வெளியே வந்தா... மனசு அவ்வளவு ஃப்ரெஷ்ஷா இருந்தது. உடனே, என் மனைவிகிட்ட 'படத்தை மிஸ் பண்ணாம பாரு’னு போன்ல சொன்னேன். அவங்க திரும்பத் திரும்ப குடும்பத்தோட மூணு தடவை பார்த்தாங்க. சிம்பிள் சினிமா... ஆனா, கிரேட் ஃபிலிம். படத்தை எஸ் ஃபிலிம்ஸ் சார்பாக பண்ணிரணும்னு தீர்மானிச்சேன். ஆனா, டைரக்ட் பண்ற வாய்ப்பும் கடைசியில் என் கைக்கே வந்தது ஆச்சர்யம்.

'எந்திரன்’ மாதிரி ஒரு படம் பண்ணிட்டு, அதுக்குச் சம்பந்தமே இல்லாமல்... வேறு கலரில், யூத் வெர்ஷனில் ஒரு படம் பண்ண நினைச்சிருந்தேன். இப்போ எடிட்டிங் டேபிள்ல ரஷ் பார்க்கிறப்போ, 'த்ரீ இடியட்ஸ்’ படத்தை நான் ரீ-மேக் பண்ண எடுத்த முடிவு சரின்னு தோணுது!''

''நீங்க அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்தப்போ பார்த்த விஜய்... இப்போ இல்லை. அவரை இயக்கிய அனுபவம் எப்படி இருந்தது?''

''விஜய் இப்போ செம புரொஃபஷனல். பக்கா டிசிப்ளின். எந்த நேரம், எந்த ஸீன் எடுக்கணும்னு சொன்னாலும்... கச்சிதமா வந்து நிற்பார். இந்த மாதிரி ஒரு ஆர்ட்டிஸ்ட் கிடைச்சா, ஒரு டைரக்டர் எவ்வளவு பெரிய கேன்வாஸுக்கும் கற்பனைகளை விரிக்கலாம். நான் அசிஸ்டென்ட் டைரக்டரா அவரைப் பார்த்ததைவிட, இப்போ அவர்கிட்ட அபாரமான வளர்ச்சி. அவரை இந்தப் படத்தில் எல்லாருக்கும் பிடிக்கும். என் படங்களுக்கு முதல் ரசிகன் நான்தான். நான் ரசிச்ச விஷயத்தை அப்படியே சொல்றேன்!''

'' 'நண்பன்’ ஆரம்பிச்ச சமயத்தைக் காட்டிலும் இப்போ ஜீவாவுக்கு இமேஜும் மார்கெட் வேல்யூவும் எகிறி இருக்கு. அவரது பெர்ஃபார்மன்ஸ் எப்படி இருக்கு?''

''ஜீவாவின் நடிப்பு துல்லியம். மீட்டர் அவ்வளவு கச்சிதமா இருக்கும். ஒரு பாயின்ட் அதிகமா இருக்காது, குறைவா இருக்காது. முதல் ஸீனில் இருந்து கடைசி வரை ஒரே அளவுதான். 'நீங்க மோகன்லால், மம்முட்டி சேர்ந்த குட்டிக் கலவை’னு அவர்கிட்ட சொன்னேன். இப்போதைய டிரெண்டுக்கு என்ன தேவையோ, அதைக் கொடுக்கிறார். ஆக்டர்னு துளி பந்தா கிடையாது. ஏதோ கார்பரேட் ஆபீஸ் போற மாதிரி இருப்பார். ஸ்வீட் பாய்!''

''இந்த செட்டில் ஸ்ரீகாந்த்... ஆச்சர்யமா இருந்தது...''

''கேரக்டருக்கு அவ்வளவு பொருத்தம். ஜாலியான - ஆனால், அப்பாவுக்குப் பயந்த பிள்ளையா, காலேஜ் படிக்கிற குழந்தை மாதிரி நடிச்சிருக்கார் ஸ்ரீகாந்த். முதல் ஸீனில் இருந்தே இந்த த்ரீ இடியட்ஸ் பின்னாடி டிராவல் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க!''

'' 'சிங்கிள் சிங்கம்’ ஹீரோக்களை வெச்சுதான் உங்கள் மாஸ்டர் ஹிட் படங்கள் கொடுத்து இருக்கீங்க. இந்த மல்ட்டி ஹீரோ சப்ஜெக்ட் உங்களை சிரமப்படுத்துச்சா?''

''முன்னாடி பண்ண படங்களைக் காட்டிலும் இது ரொம்பவே ஈஸியா இருந்தது. அவங்க மூணு பேரை மட்டும் பார்க்காதீங்க. படத்தில் நடிச்ச ஒவ்வொருவருமே ஒரு ஸ்டார்தான். 'சிவாஜி’, 'எந்திரன்’ ரெண்டு படத்துக்கும் சத்யராஜ் சார்கிட்ட போனேன். அவரால் நடிக்க முடியலை. இந்தப் படத் துக்கு கேட்டதும் உடனே ஒப்புக்கொண்டார். எஸ்.ஜே.சூர்யா. இரண்டே ஸீன் வந்தாலும் பரபரக்கவைப்பார். இலியானாவுக்கு எவ்வளவு பெரிய கிரேஸ் இருக்குன்னு தெரியும். இவங்க எல்லாரும் உங்க முன்னாடி அழகழகா வந்து நிப்பாங்க!''

''விஜய் கேரக்டருக்கு சூர்யா, சிம்புனு ஆரம்பத்தில் பெரிய மியூஸிக்கல் சேர் விளையாட்டே நடந்ததே... என்ன பிரச்னை?''

''பொதுவா எல்லாப் படத்துக்கும் அப்படி வர்றதுதானே! சில நடிகர்களைப் பரிசீலிப்போம். அவங்க கால்ஷீட், சம்பளம் எல்லாம் பொறுத்துத்தானே ஃபிக்ஸ் பண்ண முடியும். எனக்கு எல்லாமே செட் ஆகணும். அதுக்கு கொஞ்ச நேரம் எடுத்துக்கிட்டாலும் பிரச்னை இல்லை. ஆனா, படம் ஆரம்பிச்சுட்டு பிரச்னைன்னா... கஷ்டம். இப்போ, ஆல் இஸ் வெல்!''

''ஒரிஜினலில் நடிச்ச மாதவன், 'தமிழில் த்ரீ இடியட்ஸ் எடுத்தால் அஜீத், விஜய், விக்ரம் நல்ல சாய்ஸ்’னு விகடன் பேட்டியில் சொல்லி இருந்தார். அது இன்னும் நல்லா இருந்திருக்குமோ?''

''சரிப்பட்டு வர்றதைத்தான் யோசிக்கணும். இத்தனைக்கும் நானே 'ஒய் நாட்?’னு கேட்டு முடிவு எடுக்கிற ஆளு. சில விஷயங்களை யோசிக்கவே கூடாது. அது, பேச நல்லா இருக்கும், எழுத நல்லா இருக்கும். ஆனா, யதார்த்தத்துக்குச் சரி வராது!''

''ரீல் 'இந்தியன் தாத்தா’ ரியல்ல வந்த மாதிரி அண்ணா ஹஜாரே தூள் கிளப்பிட்டு இருக்கார். இப்போ 'இந்தியன் பார்ட் 2 எடுக்கலாமே..?''

''ஆமாங்க... அண்ணா ஹஜாரேவை 'இந்தியன் தாத்தா’னு விகடனில் எழுதி இருந்தாங்க. சந்தோஷமா இருந்தது. அண்ணா ஹஜாரே அலைக்குப் பின்னாடி 'இந்தியன் பார்ட் 2’ எடுக்கலாமேனு கேட்கிறாங்க. நானே அப்படி நினைச்சேன். இப்போ இன்னும் நல்லா இருக்கும்னு தோணுது. ரத்னம் சார் 'ஆரம்பிங்க’னு சொல்லிட்டே இருக்கார். 'நண்பன்’ ரிலீஸ் ஆகட்டும். சான்ஸ் எப்படின்னு பார்க்கலாம்!

இந்தியா எப்படி இருக்கணும்னு ஒவ்வொரு குடிமகனும் கண்ட கனவை அண்ணா நனவாக்கப் போராடுறார். அது அவரோட லட்சியமாக மட்டும் இருக்கக் கூடாது. நம்ம எல்லோருடையதாகவும் மாறணும். பக்கத்தில் இருக்கிற சிங்கப்பூர் சுபிட்சமா இருக்கும்போது... நாம ஏன் முயற்சிக்கக் கூடாது?''

''தமிழ் சினிமாவின் இப்போதைய டிரெண்ட் எப்படி இருக்கு?''

''திடீர்னு வசந்தபாலன் எஸ்.எம்.எஸ். பண்ணினான், 'ஆரண்ய காண்டம் மிஸ் பண்ணாதீங்க’னு. இப்பல்லாம் ஒரு படம் ஹிட் ஆகணும்னா... 'பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட்’ ஆக இருக்கணும். எல்லாருக்கும் பிடிக்கணும். ஏதோ ஒண்ணு குறைஞ்சாலும் இடிக்குது. 'ஆரண்ய காண்டம்’ இன்னும் ஓடி இருக்கணும். ரூம் போட்டு யோசிச்சாக்கூட, ஜனங்களின் மனசு புரியலை. சுஜாதா அடிக்கடி சொல்ற மாதிரி... அது ஒரு தங்க விதி. இவ்வளவு வருஷமா இங்கே இருக்கேன். எனக்கும் இப்போ வரை எதுவுமே புரியலை!''

''ரஜினி உடல்நிலை பத்தி விசாரிச்சீங்களா?''

''ஒருநாள் திடீர்னு ஐ.எஸ்.டி. நம்பர்ல இருந்து கால். ரஜினி சாரா இருக்குமோனு நினைச்சு அட்டெண்ட் பண்ணா... ரஜினியேதான்!

'நல்லாயிட்டேன் ஷங்கர். ஃப்ரீயா சந்திக்கலாம். 'நண்பன்’ பார்க்க ஆசையா இருக்கேன்’னு சொன்னார். 17-ம் தேதி போன் பண்ணி 'ஹேப்பி பர்த் டே’ சொன்னார். அவர் சௌகரியமாகி, அவருக்கு சௌகரியமா இருக்கும்போது... பார்க்கலாம்!''

Related Posts Plugin for WordPress, Blogger...