இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Thursday, June 30

ஷங்கர், முருகதாஸைத் தொடர்ந்து கெளதம் மேனன் – விஜய் காட்டில் மழை

ஷங்கரின் நண்பன், ராஜாவின் வேலாயுதம் இரண்டும் முடியும் கட்டத்தில் இருக்கிறது, இதற்கிடையே விஜய்யின் அடுத்தபடம் எதுவென்று பரபரப்பு பற்றி எரிய அதில் எண்ணெய் ஊற்றினார் ஏ.ஆர். முருகதாஸ். ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சூர்யா நடிக்க ஏழாம் அறிவை இயக்கி வருகிறார் இந்தப்படம் ஆகஸ்டில் திரைக்கு வர இருக்கிறது. இது முடிந்ததும் விஜய் நடிக்க ஒரு படத்தை இயக்குவதாக கிட்டத்தட்ட செய்தி உறுதியாக்கப்பட்டிருக்கிறது. இந்தப்படத்தை முருகதாஸின் நிறுவனத்தின் பேரில் எஸ்.ஏ சந்திரசேகர் தயாரிக்கலாம் என்றும் தெரிகிறது.

இந்நிலையில் விஜய்யை தன் படத்தில் நடிக்க கெளதம் மேனன் அழைத்துள்ளார், ஏற்கனவே பலப்படங்களை அறிவித்திருக்கும் கெளதம் மேனன் சென்ற வாரத்தில்தான் ஜீவா நடிக்கும் படத்தை உறுதி செய்திருக்கிறார். இந்தப்படம் வரும் ஆகஸ்டில் தொடங்க இருக்கிறது. இது முடிந்ததும் விண்ணைத்தாண்டி வருவாயா 2 செய்வதாக அறிவித்திருக்கிறார். அனேகமாக முருகதாஸ் படத்தை முடித்துவிட்டு விஜய்யும், ஜீவா படத்தை முடித்துவிட்டு கெளதம் மேனனும் ஜோடி சேரக்கூடும். இதனால் விடிவி 2 தள்ளிப்போக வாய்ப்பிருக்கிறது.

விஜய்யிடம் விசேஷ மாற்றம்!

முன்பொரு முறை பிரஸ்மீட் ஒன்றில் டைரக்டர் தரணி சொன்ன வார்த்தைகள் இது. விஜய் சாரிடம் கதை சொல்லப் போகும்போது அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருப்பேன். விழுந்து விழுந்து சிரிக்கிற காட்சிகளில் கூட மிக அமைதியாக புன்னகைப்பார். அதுவே எனக்கு பெரிய திருப்தியாக இருக்கும். அவர் இப்படி சிரித்துவிட்டால், தியேட்டரில் அத்தனை பேரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள் என்று அர்த்தம். தரணியின் இந்த வார்த்தைகளை அதே அமைதியோடு கேட்டுக் கொண்டிருந்தார் விஜய்யும்.

அப்படிப்பட்டவரிடம் இன்று பெரிய மாற்றம் வந்திருப்பதாக சந்தோஷப்படுகிறார்கள் திரையுலகத்தில். தன்னிடம் வந்த மிக முக்கியமான கதைகளை கூட வேண்டாம் என்று திருப்பி அனுப்பியவர் அவர். சிங்கம் படத்தின் கதையை முதலில் விஜய்யிடம்தான் சொன்னார் ஹரி. காக்க காக்க கதையை கூட முதலில் இவரிடம்தான் சொன்னார் கவுதம். கஜினி மட்டும் என்னவாம்? முருகதாஸ் முதலில் வந்ததே விஜய்யிடம்தான். அயன் கதையின் நாயகனாக கேவிஆனந்தின் மனதில் சித்தரிக்கப்பட்டவரும் இவரேதான். இப்படியெல்லாம் தேடி வந்த கதைகளையும் இயக்குனர்களையும் ஏதோ சில காரணங்களால் மறுதலித்த விஜய், தற்போது அடியோடு மாறியிருக்கிறார்.

கடந்த சில வாரங்களாக மேற்படி இயக்குனர்கள் அத்தனை பேரையும் தனித்தனியே தன் வீட்டிற்கு அழைத்தாராம். மனம் விட்டு பேசியவர், தனது அன்பை பலப்படுத்தும் வகையில் அவர்களுக்கு விருந்தும் அளித்தாராம். விஜய்யின் இந்த வியத்தகு மாற்றம், இன்டஸ்ட்ரி முழுக்க கசிந்து எல்லாரையும் இன்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது

உதயன் நாயகி விஜய்யுடன் இணைகிறாராம்?

கடந்த ஆட்சியில் வந்திருந்தால் கதையே வேறு. ஆட்சி மாறியதால் முன்னாள் முதல்வரின் பேரன் அருள்நிதி நடித்த உதயன் திரைப்படம், தியேட்டர்களில் தள்ளாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. பல தியேட்டர்களில் படத்தையே தூக்கிவிட்டார்கள். இத்தனைக்கும் ஒரு கமர்ஷியல் படத்திற்குண்டான அத்தனை அசத்தல்களையும் உள்ளடக்கிய படம்தான் அது.

இத்துப்போன கிளையா இருந்தாலும், இலந்தை பழம் ருசி என்பது போல படம் ஓடாவிட்டாலும், இப்படத்தின் நாயகியான பிரணதிதாவை பார்த்து பெருமூச்செரிந்தது திரையுலகம். மலைத் தேனையும் மைதா மாவையும் பிசைந்து செய்த மாதிரி இருக்கிறாரே என்றும், அந்த சிரிப்பை பார்த்துகிட்டே சீமெண்ணையை கூட குடிக்கலாம் என்றும் வசனம் பேசியே வளைந்து நெளிந்தது.

அதற்குள் ரிசர்வேஷன் கூப்பனோடு நின்றார்கள் சில இயக்குனர்கள். ஆனால் இவர்களில் டாப் யாரோ, அவர் வந்தால்தான் கால்ஷீட் என்று காத்திருந்தார் பிரணதிதா. அதற்கான பலனும் கிடைத்திருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ்-விஜய் இணையும் படத்தில் பிரணதிதாவே ஹீரோயினாக இருக்கலாம்!

Tuesday, June 28

ஒரே நாளில் விஜய் - அஜீத் பட ரிலீஸ் ?

அஜீத் நடித்து வரும் 50வது படம் 'மங்காத்தா'. இப்படத்தை அஜீத்தின் பிறந்தநாள் வெளியீடு என்று ஆரம்பிக்கப்பட்டு, தற்போது ஆகஸ்ட் 15 வெளியிட முனைப்புடன் பணியாற்றி வருகிறார்கள்.

விஜய் நடித்து வரும் 52வது படம் 'வேலாயுதம்'. விஜய், ஜெயம் ராஜா கூட்டணியில் உருவாகி இருக்கும் பிரம்மாண்ட திரைப்படம் என்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. இப்படத்தையும் ஆகஸ்ட் 15 அன்று வெளியிட பணியாற்றி வருகிறார்களாம்.

அஜீத், விஜய் இருவரின் படங்களுமே ஒரே தினத்தில் வெளிவந்தால் விநியோகஸ்தர்களுக்கு கொண்டாட்டம் தான் ஆனால் மங்காத்தா, வேலாயுதம் இரண்டுமே பெரிய பட்ஜெட் படங்கள் என்பதால் இரண்டு படங்கள் ஒரே தினத்தில் வெளியாக வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள் கோடம்பாக்கத்தில். இது குறித்து வேலாயுதம் படக்குழுவினரிடம் விசாரித்த போது " வேலாயுதம் படத்தின் இசை வெளியீடு ஜுலை இரண்டாம் வாரத்தில் வெளியாகலாம். இப்படத்தில் எல்லா பாடல்களும் விஜய்க்கு பிடித்த மாதிரி அமைந்து உள்ளது.

விஜய்யும் இசை வெளீயிட்டு விழாவை ஆர்வத்தோடு எதிர் நோக்கியுள்ளார். ஆகஸ்ட் 15ம் தேதி இப்படம் வெளிவருவதில் எந்த சந்தேகமும் இல்லை.

'மங்காத்தா' படமும் அதே தினத்தில் வாய்ப்பில்லை. விஜய், அஜீத் இரண்டு பேருமே நெருங்கிய நண்பர்கள் என்பதால் இருவருமே பேசி வைத்து 'மங்காத்தா' படத்தை வெளியிடுவதை தள்ளிப் போடலாம். வேலாயுதம் தள்ளி போக வாய்ப்பு இல்லை" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.

எப்படியோ இரண்டு படங்களுமே அவர்களது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தால் சரிதான்!

Monday, June 27

விஜய் நடித்த போக்கிரி பட தயாரிப்பாளர் கைது


தமிழ் மற்றும் தெலுங்கு படங்களின் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் ரமேஷ். தமிழில் விஜய் நடித்த “போக்கிரி” உள்ளிட்ட படங்களை தயாரித்தவர். சமீபத்திய இவர் தயாரித்த படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லை. இந்நிலையில் தமிழில், டைரக்டர் சுசீந்திரன் இயக்கத்தில், விக்ரம், தீக்ஷா செத் நடிக்கும் “ராஜபாட்டை” என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் வைத்து ரமேஷை, ஆந்திர புலனாய்வுத்துறை அதிகாரிகளால் கைது செய்தனர்.

இதுகுறித்து விசாரித்த போது, ஆந்திராவில் வை‌ஜெயந்தி ரெட்டி என்பவரிடம் ரூ.18கோடி வரை கடன் வாங்கி‌ய ரமேஷ், ரூ.3.5 கோடியை மட்டும் திருப்பி செலுத்தியிருக்கிறார். மீதி தொகையை வைஜெயந்தி திருப்பி கேட்ட போது, பிரபல ரவுடி பானு கிரண் மூலம் அவரை மிரட்டியிருக்கிறார் ரமேஷ். பானு கிரண் மீது ஏற்கனவே சூரி கொலை வழக்கு உட்பட பல குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும் பானு கிரணுக்கு, ரமேஷ் ரகசியமாக பல உதவிகள் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரமேஷை ஆந்திர புலனாய்வுத்துறையினர் கைது செய்துள்ளனர்.

விரு விரு ஷங்கர், வீம்பு பண்ணும் ஹாரீஸ்


விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா என்று பிஸியான நடிகர் நடிகைகளை வைத்துக் கொண்டு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் பிஸி பிஸியான இயக்குனர் ஷங்கர். படப்பிடிப்பும் ஈமெயில் வேகத்தில் போய் கொண்டிருக்கிறது. ஆனால் இதுவே ஷங்கருக்கு பெரும் தலைவலியாக இருக்கிறதாம். ஏன்?

மேற்படி நால்வருமே பரபரப்பானவர்கள் என்பதால் அடுத்தடுத்த படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டார்கள். அதனால் சொன்ன காலத்திற்குள் படத்தை முடித்தால்தான், எங்க பிழைப்பு ஸ்மூத்தா போகும் என்கிறார்களாம். அதுமட்டுமல்ல, படத்தை நவம்பருக்குள் வெளியிட வேண்டும் என்று நெருக்குகிறார்களாம் தயாரிப்பு நிறுவனத்திலும்.

பொதுவாகவே தான் இயக்கும் படங்களின் எடிட்டிங் நேரத்தில் அங்கேயே இருப்பார் ஷங்கர். இப்போது எல்லாமே தலைகீழ். எடுத்த பகுதிகளை எடிட்டருக்கு அனுப்பிவிட்டு அதை எப்படி செய்திருக்கிறார் என்பதை கூட கவனிக்க நேரமில்லாமல் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருக்கிறார். இதில் ஹாரிஸ் ஜெயராஜின் மெத்தனமும் இவரது கழுத்தை நெரிக்க ஆரம்பித்திருக்கிறதாம்.

படத்தில் விஜய்- இலியானா பாட வேண்டிய டூயட் பாடலை இன்னும் முடித்து தராமலே இருக்கிறார் ஹாரிஸ். இவர் வெளிநாட்டில் நடைபெறவிருக்கும் இசைநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளப் போவதால், இந்த வேலையை தள்ளிப் போடுகிறாராம். எலக்ட்ரிக் ரயிலில் எல்லாமே வேகம்தான். ஆனால் செயினை பிடித்து தொங்குகிறாரே ஹாரிஸ்! என்னதான் செய்யப் போகிறாரோ ஷங்கர்…?

ஷங்கரிடம் பேசிய ரஜினி !


விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா, இலியானா உள்ளிட்ட பலர் நடிக்க ஷங்கர் இயக்கி கொண்டிருக்கும் படம் 'நண்பன்'. இப்படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

நண்பன் படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் காட்சிகள் மற்றும் படத்தை பற்றிய தகவல்கள் ஆகியவற்றை அவரது இணையத்தில் அவ்வப்போது வெளியிட்டு வந்தார்.

தற்போது இயக்குனர் ஷங்கர் தனது இணையத்தில் கூறியிருப்பது " நண்பன் படத்திற்காக ஐராப்பா, அந்தமான், கோயம்புத்தூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம்.

60% சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. படத்தின் கஷ்டமான, முக்கியமான காட்சிகள் மற்றும் க்ளைமாக்ஸ் காட்சிகளை படமாக்கி விட்டோம். இது வரை எடுத்த காட்சிகளை எடிட் செய்து டப்பிங் ஆரம்பித்து விட்டோம்.அடுத்த வாரம் முதல் ஒரு நீண்ட ஷெட்டியூல் நடைபெற உள்ளது. அத்துடன் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும்.

அடுத்த சந்தோஷமான செய்தி 'நண்பன்' படத்தின் சவுண்ட் வடிவமைப்பாளராக ரசூல் பூக்குட்டி பணியாற்ற இருக்கிறார்.
நாங்கள் பாரத் பொறியியல் கல்லூரியில் படப்பிடிப்பு நடத்தி கொண்டிருந்தோம். அப்போது சிங்கப்பூரில் இருந்து எனக்கு போன் வந்தது. நான் யாராவது சொந்தக்காரர்கள் அல்லது எனது ரசிகர்களாக இருக்கும் என கருதினேன். பின்பு ரஜினி சாராக இருக்குமோ என்று நினைத்தேன்.


போன் அட்டண்ட் செய்தால் ரஜினி சார் தான். எனக்கு ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. என்னிடம் நலம் விசாரித்தார்.! பழைய சந்தோஷத்துடன் பேசினார். உற்சாகமாக ஆர்வத்துடன் பேசினார்.. அவர் 45 நாட்கள் ஒய்விற்கு பிறகு சென்னை திரும்புவதாக கூறினார். " என்று கூறியுள்ளார்.



Sunday, June 26

நண்பன் ஷுட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்!

















விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா மற்றும் பலர் நடித்துவரும் படம் 'நண்பன்'. இப்படத்தை ஷங்கர் இயக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுபாக நடந்து வருகிறது நண்பன் படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் கீழ் உள்ள புகைப்படத்தில் காணலாம்!


Saturday, June 25

விஜய்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்!


"வேலாயுதம்", "நண்பன்" படத்தை தொடர்ந்து விஜய் அடுத்து, சீமான் இயக்கும் "பகலவன்" படத்தில் நடிக்கப்போவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய் நடிக்கப்போவதாக ஒரு செய்தி அடிபடுகிறது. இந்தா, அந்தா, என கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேலாக இழுத்தடித்து கொண்டே வருகிறது சீமான், விஜய்
கூட்டணி. "காவலன்" படத்தை அடுத்தே சீமானின் "பகலவன்" படத்‌தில் நடிக்க இருந்தார் விஜய். ஆனால் இடையில் இலங்கை தமிழர் பிரச்சனையில், அரசு எதிராக பேசியதற்காக சிறை சென்றார். இதனால் இந்தபடம் தள்ளிபோனது.

இதனையடுத்து விஜய், "வேலாயுதம்", "நண்பன்" படத்திற்கு கால்ஷீட் கொடுத்து அதில் நடிக்க தொடங்கிவிட்டார். சிறைவாசம் முடித்து வந்த சீமான் உடனே "பகலவன்" படத்திற்கான வேலையை தொடங்க ஆரம்பித்தார். இதுதொடர்பாக விஜய்யையும் சந்தித்து பேசினார். இதனால் "நண்பன்" படத்தை அடுத்து, "பகலவன்" படத்தில் தான் விஜய் நடிப்பார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய விஜய்யை டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் சந்தித்து பேசினார். அப்போது ஒரு அருமையான கதை ஒன்றை ‌ரெடி பண்ணி, அதை விஜய்யிடம் காண்பித்து இருக்கிறார். விஜய்க்கும் கதை பிடித்து போக அவரும் நடிப்பதாக கூறிவிட்டாராம். படத்தில் விஜய்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை சோனம் கபூர் நடிப்பதாகவும், விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை விஜய், முருகதாஸ் நடிக்க ஒப்புக்கொண்டால் அவரது படத்தில், விஜய் நடிப்பது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, June 24

இன்றைய யூத் ஐகான் யார் என்ற சர்வேயில் நடிகர் விஜய் முதலிடம்!

vijay

இப்போதிருக்கும் இளைஞர்களின் மனதில் யூத் ஐகானாக இருப்பவர் ரஜினியா, கமலா, விஜயா, அஜித்தா என்று இணையதளத்தில் ஒரு சர்வே எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிமிடம் வரை பதிவான வாக்குகளின்படி நடிகர் விஜய் முதலிடத்தில் உள்ளார்.

தமிழகத்தின் பிரபல வார இதழின், சினிமா இணைய தளத்தில் ‘இன்றைய இளைஞர்களின் மனதில் யூத்ஐகான் என்று யாரை குறிப்பிடுகிறார்கள்?’ என்று கேள்வி கேட்டிருக்கிறார்கள். இதற்கு பதில் அளிக்க ஏதுவாக ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், ஆர்யா, விஷால் என்று நடிகர்களின் பெயர்களை பட்டியலிட்டிருக்கிறார்கள்.

இந்த நிமிடத்தின் நிலவரப்படி 1182 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 879 (74.4%) வாக்குகள் பெற்று நடிகர் விஜய் முன்னிலையில் உள்ளார். 107 வாக்குகள் பெற்று அஜித் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளார். இவரையடுத்து சூர்யா, கமல், ரஜினி, சிம்பு, விக்ரம் மற்றும் ஆர்யா, தனுஷ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். விஷாலுக்கு ஒரு வாக்குகள் கூட பதிவாகவில்லை.

இன்று காலைதான் இந்த சர்வே துவங்கியது. வரும் ஜூலை 30-ம் தேதிதான் இந்த சர்வே முடியும். அதற்குள் இந்த நிலை மாறுமா என்பதை பொறுத்திருந்துத்தான் பார்க்க வேண்டும்.

இப்படி ஒரு வித்தியாசமான சர்வே இணையத்தில் நடைபெறுகிறது என்பதை நடிகர் விஜய் தனது டுவிட்டர் இணைய பக்கத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறார். அதைப் பார்த்து விட்டு அவரது ரசிகர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள்.

சீனாவில் படத்தை வெளியிடலாமா ஆலோசித்து வரும் விஜய்!




நடிகர் ரஜினியின் படம் வெளிவந்தால் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு என்று தான் பார்ப்பார்கள். அவரை தொடர்ந்து நடிகர் விஜய் தனது படங்களான 'திருமலை', 'கில்லி', 'திருப்பாச்சி' சிவகாசி ,போக்கிரி'
உள்ளிட்ட பல படங்களின் வரவேற்பின் மூலம் விநியோகஸ்தர்கள் ரஜினியை அடுத்து விஜய் படம் நல்ல பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் என்று பேசி வந்தார்கள்.

அதற்கு ஏற்றார் போல் விஜய்யும் ரஜினி தனது படங்களில் பண்ணும் ஸ்டைல், வசனங்கள் என பலவற்றை தனது படங்களில் பின்பற்றினார்.

' போக்கிரி' படத்தில் வரும் 'நீ அடிச்சா பீஸ்... நான் அடிச்சா மாஸ்','ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்' ஆகிய வசனங்களும், 'வேட்டைக்காரன்' படத்தில் பாட்ஷா படத்தை போலவே ஆட்டோ டிரைவராக நடித்ததும் இதற்கு சான்று.


ரஜினி நடித்த 'முத்து' படம் சீனாவிலும் வெளியானது. அப்படத்தின் மூலம் சீனாவிலும் அவருக்கும் ரசிகர்கள் உருவாகினர். 'முத்து' படத்தை தொடர்ந்து அவர் நடித்த பல படங்கள் சீனாவிலும் வெளியானது.

தற்போது விஜய் நடித்த 'காவலன்' படம் சீனாவில் ஹாங்காய் பட விழாவில் கலந்து கொண்டது. 'காவலன்' படத்தை பார்த்தவர்கள் விஜய்யின் நடிப்பையும் , காமெடியையும் வெகுவாக ரசித்தனர்.

'காவலன்' படத்திற்கு ஹாங்காயில் கிடைத்த வரவேற்பால் ரஜினியை போலவே தனது படங்களையும் சீனாவில் வெளியிடலாமா என்று ஆலோசித்து வருகிறாராம் விஜய். அதிலும் விஜய்யின் அடுத்து வெளிவர இருக்கும் படங்கள் கண்டிப்பாக சீனாவில் வெளியாகும் என்று கோடம்பாக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய்யை அடுத்து இயக்குவது யார்? : விஜய் பதில்


விஜய் தற்போது நடித்து வரும் படம் 'வேலாயுதம்'. இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

அனைத்து படப்பிடிப்புகளும் நடந்து முடிந்தவுடன் ஜுலை 2வது வாரத்தில் இசை வெளீயிட்டு விழா நடைபெற இருக்கிறதாம். ஆகஸ்ட் மாதம் இப்படத்தை வெளியிட இருக்கிறார்கள்.

இந்நிலையில் விஜய் நடிப்பில் அடுத்த வெளீயிடாக ஷங்கரின் இயக்கத்தில் 'நண்பன்' வெளிவர இருக்கிறது. அடுத்து யார் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார் என்பது தான் இப்போதைய தமிழ் திரையுலகினரின் பேச்சு!.

சீமான் இயக்கத்தில் 'பகலவன்' படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். சீமான் அடுத்து நான் விஜய் படத்தை தான் இயக்க இருக்கிறேன் என்று கூறி வந்தாலும் விஜய் இன்னும் எனது அடுத்த படம் இது தான் என்று கூறவில்லை. அதுமட்டுமல்லாது ஏ.ஆர்.முருகதாஸ் சூர்யா நடிப்பில் 'ஏழாம் அறிவு' படத்தை முடித்துவிட்டு விஜய் வைத்து படம் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் தனது பிறந்தநாளை கொண்டாடத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் விஜய். அச்சந்திப்பில் விஜய் பேசிய
து "எனது திரையுலக வாழ்க்கையில் 'காவலன்' படம் முக்கியமானது. அப்படத்திற்கு ஏகப்பட்ட பிரச்னைகளை சந்தித்தேன். அனைத்து பிரச்னைகளை முடிந்து படம் வெளியாகி வரவேற்பையும் பெற்றது. அதுமட்டுமல்லாது ஷாங்காய் திரைப்பட விழாவில் திரையிட்டோம்.

அடுத்து 'நண்பன்' படத்தில் நடித்து கொண்டிருக்கிறேன். இயக்குனர் ஷங்கர் இந்தியாவின் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். அவருடைய இயக்கத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது. 'நண்பன்' படம் கண்டிப்பாக எனது திரையுலக வாழ்வில் பெரிய படமாக அமையும்." என்று கூறினார்.

அதனையெடுத்து அடுத்த படம் சீமான் இயக்கத்திலா, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலா என்று கேட்டனர். அதற்கு விஜய் பார்க்கலாம் என்று கூறினார்.

இயக்குனர் சீமான் விஜய்யின் கால்ஷுட்டிற்காக காத்து கொண்டிருக்க, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிற்கு பல தயாரிப்பாளர்கள் இப்போதே நாங்கள் தயாரிக்க முன் வருகிறோம் என்று போன் போட்டு கொண்டிருக்கிறார்களாம்.

Thursday, June 23

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்!

ar-murugadoss-and-vijay

‘கஜினி’ படத்தை கொடுத்ததிலிருந்து இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் மார்கெட் சட்டென்று உயர்ந்து விட்டது. இங்கிருந்து பாலிவுட்டிற்கு போனார். அங்கும் ஒரு ஹிட் கொடுத்தார். தற்போது சூர்யாவை வைத்து ‘7ஆம் அறிவு’ என்ற படத்தை தமிழில் இயக்கி வருகிறார்.

இப்படம் முடிந்ததும் இளைய தளபதி விஜய்க்காக ஒரு படத்தை இயக்கப் போகிறார் என்று தகவல் வந்திருக்கிறது. நண்பன் படப்பிடிப்பில் இருந்த போது விஜய்யை சந்தித்து கதை சொல்லியிருக்கிறார் முருகதாஸ். கதை பிடித்துப் போகவே உடனே நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் விஜய்.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை சோனம் கபூரை நடிக்க வைக்கலாமா என்று யோசித்து வருகிறாராம முருகதாஸ். இப்படத்திற்கு இவரது ஆஸ்தான இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவை மேற்கொள்ள இருக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தினை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனும் விஜயின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகரும் இணைந்து தயாரிக்க இருக்கிறார்களாம். இப்படத்தை பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் உலக அளவில் வெளியிட இருக்கிறதாம்.

விஜய் பிறந்தநாள் கொண்டட்டம்! ஒரு சிறப்பு பார்வை

இதுவரை வந்த பிறந்த நாட்கள் எப்படியோ? இந்த பிறந்தநாள் சற்று விசேஷம்தான் விஜய்யை பொருத்தவரை. ஏனென்றால் இந்த பிறந்த நாளில்தான் அதிமுக கொடியுடன் வந்திருந்த தொண்டர்களையும் அந்த கூட்டத்தில் பார்க்க முடிந்தது. விஜய் 5 ம் வகுப்பு வரை படித்த பால லோக் பள்ளிக்கு வெளியே திரண்டிருந்த ரசிகர்கள் கூட்டம் தங்கள் தலைவரை வாழ்த்தி கோஷம் எழுப்பிக் கொண்டிருக்க, குறிப்பிட்ட ரசிகர் படையுடன் உள்ளே நுழைந்தார் விஜய்.

பள்ளியில் படிக்கும் இளம் சிறார்கள் முன்னிலையில் தனது கண்தான விண்ணப்பத்தை நிரப்பிய விஜய், தன்னுடன் வந்திருந்த ரசிகர்களின் விண்ணபத்தையும் அங்கு வைத்தே நிர்வாகிகளிடம் வழங்க செய்தார். இந்த பருவத்திலிருக்கும் உங்களிடம் சொன்னால்தான் உங்கள் மனதில் இதுபோன்ற நல்ல விஷயங்கள் பதியும். அதனால்தான் இந்த பள்ளியை தேர்ந்தெடுத்தேன் என்றார் அவர்.





Related Posts Plugin for WordPress, Blogger...