இளைய தளபதி விஜய் ரசிகர் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கு நன்றி மீண்டும் வருக!!!

Monday, May 23

விஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை??

Vijay completes Kavalkaran first schedule

நம்ம இளைய தளபதியின் காவலன் திரைப்படம் தனுஷின்
ஆடுகளம் படத்திற்கு போட்டியாகவே வெளியிடப்பட்டிருந்தது.
ஆனாலும் தனுஷின் ஆடுகளம் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான
தேசிய விருதை பெற்றுக்கொடுத்திருக்கிறது.விஜய்க்கு கிடைக்கவில்லை.
இதற்கான காரணம் என்ன என்று பலர் மண்டையை பிச்சுக்கொண்டு
இருந்த போது சில நண்பர்கள் என்னை தொடர்புகொண்டு கேட்டாங்க
என்ன காரணம் அப்படீன்னு!!(ஏன்'னா நான் தானே தேசிய விருது தேர்வுக்குழு தலைவரா இருக்கிறன் பாருங்க!)

நான் சொன்ன ஒரே பதில்..
மச்சான் தனுஷ் எல்லாம் இப்ப பீல்ட்'டுக்கு வந்த பயல்...
அதனால வேணும்னா அவங்களுக்கு தேசிய விருது
பெரிதாகத் தெரியலாம்.ஆனா .,
நம்ம இளைய தளபதி அதையெல்லாம் கடந்தவரு..
அவரோட குறி எல்லாம் ஆஸ்கார் தான் என்றேன்..

அவன் கட் பண்ணினானோ,போன் தானா கட் ஆச்சோ தெரியல
லைன் கட் ஆகிருச்சு!!

இன்னொரு தகவலும் தெரிய வருது என்னண்டா,
தமிழக அரசியலில மும்மரமாய் வேலை பார்த்ததால
தேசிய விருதுக்கான போட்டியிலிருந்து வாலண்டியரா
விலகிட்டாராம் நம்ம தளபதி..

இல்லாவிடின் ஆடுகளத்துக்கு ஏன் அத்தனை விருதுகள்
போயிருக்க வேண்டுமென்று நேற்று ப்ரீத்தி சிந்தா கூட
ஆதங்கமா கதைச்சாங்க..
அவங்க ஐ பி எல்'லில ஆடிக்கிட்டு இருந்ததால
தனுஷ் ஆத்தே ஆத்தே பாடலுக்கு ஆடின ஆட்டத்தை
ரொம்பவே மிஸ் பண்ணிட்டாங்களாம்!!

"உன்ன வெள்ளாவி வைச்சுத்தான் வெளுத்தாங்களா..
இல்லை வெயிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா.."
என்ற பாடல் வந்து ஆக்சுவலி ப்ரீத்தியை பார்த்து தான்
தாகூர் எழுதினவராம்...
அத சுட்டு இவங்க காசு பார்த்திட்டதாவும் கடுப்பாய்
கதைச்சாங்க ப்ரீத்தி!!

அப்ப தான் தெரிஞ்சுது அவங்க தமிழ் படம் கூட
பார்ப்பாங்கன்னு!!இந்த விஷயம் முதலே தெரிஞ்சிருந்தா,
மணி ரத்னம்கிட்ட புது படம் நடிக்க வந்த சான்ஸ்'ச
விஜய்க்கு விட்டு குடுத்திருப்பேனா...
ஆத்தே ஆத்தே ஆட்டத்தை விட எத்தனை குத்து
ஆட்டங்கள் போட்டிருப்போம்...அப்பிடியே ஒரு நாலு
ஸ்டெப்பு போட்டிருந்தம்னா ஒரு பாட்டில,இப்ப ப்ரீத்தி
சிந்தா என் காலடில பாருங்க!!!அப்பிடியே அசந்திருக்க மாட்டாங்க!!!
அசர விடாம அடிக்கிறது தானே நம்ம பாலிசி!!

அப்பவும் சோதிடர் சொன்னார் உனக்கு ஏழரை நடக்குது
நடக்க கூடாதது எல்லாம் நடக்கும்னு...
இப்பிடி ஒரு சான்ஸ் மிஸ் ஆகும்னு அவர் கூட சொல்லேல
பயபுள்ள..ஒருவேளை,தெரிஞ்சுகிட்டும் பொறாமைல
சொல்லாம மறைச்சிருப்பாரோ??

Vijay completes Kavalkaran first schedule

எது எப்படியோ மாப்பிளை படத்துக்கு தான் அடுத்த வருடம்
தேசிய விருது குடுப்பாங்கன்னு பரவலா பேசிக்கிறாங்க...
அந்த விருது கிடைச்சா தனுஷுக்கு பெரிய சந்தோசமாய்
இருக்குமாம் ஆடுகளம் விருதை விட!!
காரணம் என்னென்னு சத்தியமா எனக்கு தெரியல பாஸ்..

ஆனா நிச்சயமா விஜய் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிலிம் பெயார்
அவார்டு குடுப்பாங்களாம் !!
விருது கிடைச்சா நம்மள மாதிரி அடி மட்ட ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தானே பாஸ்!!

நன்றி மைந்தனின் மனதில்

1 Comments:

  1. http://worldcinemasites.blogspot.com/2011/05/hindi-movie-ready-is-ready-on-june-03.html

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...